/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
இந்திய நாட்டிய விழா மாமல்லையில் இன்று துவக்கம்
/
இந்திய நாட்டிய விழா மாமல்லையில் இன்று துவக்கம்
ADDED : டிச 21, 2024 10:16 PM
மாமல்லபுரம்:மாமல்லபுரத்தில் ஒரு மாதம் நடைபெறவுள்ள இந்திய நாட்டிய விழா, இன்று மாலை துவங்குகிறது.
மாமல்லபுரத்தில் உள்ள பல்லவர் கால பாரம்பரிய சிற்பங்ளை இந்தியர்கள் மட்டுமின்றி, சர்வதேச சுற்றுலா பயணியர் கண்டு ரசிக்கின்றனர்.
இங்கு, டிச., - ஜனவரியில் சுற்றுலாவிற்கு திரளும் சர்வதேச பயணியர், நம் நாட்டு பாரம்பரிய நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளை ரசிக்க விரும்புகின்றனர்.
இத்தகைய ஆர்வம் கருதி, தமிழக சுற்றுலாத்துறை, இங்கு ஆண்டுதோறும் இந்திய நாட்டிய விழா நடத்துகிறது.
இவ்விழா, கடற்கரை கோவில் அருகில், இன்று துவங்கி, ஜன., 20ம் தேதி வரை நடக்கிறது.
தினமும் மாலை நேரத்தில் பரதம், கதகளி, மோகினி, ஒடிசி உள்ளிட்ட பாரம்பரிய நடனங்கள், கரகம், காவடி, ஒயிலாட்டம், பொய்க்கால்குதிரை ஆட்டம் உள்ளிட்ட தமிழக நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் மற்றும் பிற மாநில கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
இன்று மாலை 6:00 மணிக்கு நடக்கும் விழாவை, சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், சிறு, குறு, நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் அன்பரசன் ஆகியோர் துவக்கி வைக்கின்றனர். சுற்றுலாத்துறை முதன்மை செயலர் சந்திரமோகன், இயக்குனர் ஷில்பா பிரபாகர் சதிஷ், கலெக்டர் அருண்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
துவக்க விழாவை முன்னிட்டு, 5:30 மணிக்கு, சென்னை, அரசு இசைக் கல்லுாரி குழுவினரின் மங்கள இசை, 6:15 மணிக்கு, சென்னை, ஸ்ரீசாய் நிருத்யாலயா, நந்தினி குழுவினர் பரத நாட்டியம் நடக்கிறது.
7:45 மணிக்கு மதுரை, கலை மேம்பாட்டு நிறுவனம், கோவிந்தராஜ் குழுவினரின் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.