sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

 காத்தான்கடை பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்க வலியுறுத்தல்

/

 காத்தான்கடை பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்க வலியுறுத்தல்

 காத்தான்கடை பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்க வலியுறுத்தல்

 காத்தான்கடை பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்க வலியுறுத்தல்


ADDED : டிச 29, 2025 06:57 AM

Google News

ADDED : டிச 29, 2025 06:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செய்யூர்: காத்தான்கடை பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில், நிழற்குடை வசதி ஏற்படுத்த வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

கூவத்துார் அடுத்த காத்தான்கடை பகுதியில், கிழக்கு கடற்கரை சாலை அருகே பேருந்து நிறுத்தம் உள்ளது.

இது கடலுார், நெற்குணப்பட்டு, வேப்பஞ்சேரி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்களின் பிரதான பேருந்து நிறுத்தமாக உள்ளது.

கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்னை, புதுச்சேரி போன்ற பகுதிகளுக்கு வேலைக்கு செல்பவர்கள், பள்ளி கல்லுாரிகளுக்கு செல்லும் மாணவ - மாணவியர் என, தினமும் ஏராளமான மக்கள், காத்தான்கடை பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்துகின்றனர்.

பல ஆண்டுகளாக இங்கு நிழற்குடை வசதி இல்லாத காரணத்தால், வெயில் காலத்தில் முதியவர்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை உள்ளது.குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளும் இதனால் சிரமப்பட்டு வருகின்றனர்.

எனவே, ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, காத்தான்கடை பகுதியில் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் வலியுறுத்தி உள்ளனர்.






      Dinamalar
      Follow us