/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மதுராந்தகத்திலிருந்து- திருவண்ணாமலைக்கு அரசு பேருந்துகள் இயக்க வலியுறுத்தல்
/
மதுராந்தகத்திலிருந்து- திருவண்ணாமலைக்கு அரசு பேருந்துகள் இயக்க வலியுறுத்தல்
மதுராந்தகத்திலிருந்து- திருவண்ணாமலைக்கு அரசு பேருந்துகள் இயக்க வலியுறுத்தல்
மதுராந்தகத்திலிருந்து- திருவண்ணாமலைக்கு அரசு பேருந்துகள் இயக்க வலியுறுத்தல்
ADDED : ஏப் 02, 2025 10:02 PM
மதுராந்தகம்:மதுராந்தகத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு, அரசு பேருந்துகள் இயக்க வேண்டுமென, பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் வட்டாரம், 200க்கும் மேற்பட்ட கிராமப்புற பகுதிகளை உள்ளடக்கியது. இந்த கிராமங்களில், பல்லாயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர்.
மதுராந்தகம் பகுதியில் இருந்து திருவண்ணாமலைக்கு, அதிகமானோர் ஆன்மிக பயணம் மேற்கொள்கின்றனர்.
குறிப்பாக திருவண்ணாமலை கார்த்திகை தீபம், மஹா சிவராத்திரி மற்றும் பவுர்ணமி தினத்தில் கிரிவலம் செல்வதற்காக, அதிகமான பக்தர்கள் திருவண்ணாமலைக்குச் செல்கின்றனர்.
ஆனால், மதுராந்தகத்திலிருந்து திருவண்ணாமலைக்கு, நேரடியாக பயணம் செய்யும் வகையில் பேருந்துகள் இயக்கப்படுவதில்லை.
எனவே, மதுராந்தகம் -- திருவண்ணாமலையை இணைக்கும் வகையில், அரசு பேருந்துகள் இயக்க, போக்குவரத்து துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து பக்தர்கள், சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
மதுராந்தகம் ஏரிக்கரை பேருந்து நிறுத்தத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு, பவுர்ணமி தினத்தில் கிரிவலம் செல்ல, பேருந்துகள் நிறுத்தப்படுவதில்லை.
கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும் பேருந்துகளில், கூட்ட நெரிசலுடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
அதேபோன்று, திருவண்ணாமலையில் இருந்து செங்கல்பட்டு, கிளாம்பாக்கம் செல்லும் பயணியரை முதலில், பேருந்தில் ஏற்றி விடுகின்றனர்.
அதனால், கிரிவலம் முடிந்து பேருந்தில் ஏறும் பயணியர், மதுராந்தகம் பகுதிக்கு பயணச்சீட்டு பெற்றும், பேருந்தில் கால்கடுக்க நின்று கொண்டே வரும் சூழ்நிலை உள்ளது.
பேருந்துகளில் போதிய இடம் இல்லாமல், பயணியர் மற்றும் பக்தர்கள் வலியுடன் பயணம் செய்கின்றனர்.
இதனால், மதுராந்தகம் தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து திருவண்ணாமலைக்கு, பவுர்ணமி மற்றும் விசேஷ நாட்களில் சிறப்பு பேருந்துகள் இயக்க, போக்குவரத்து துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.