sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

சிங்கபெருமாள் கோவில் நுாலகத்திற்கு புதிய கட்டடம் அமைக்க வலியுறுத்தல்

/

சிங்கபெருமாள் கோவில் நுாலகத்திற்கு புதிய கட்டடம் அமைக்க வலியுறுத்தல்

சிங்கபெருமாள் கோவில் நுாலகத்திற்கு புதிய கட்டடம் அமைக்க வலியுறுத்தல்

சிங்கபெருமாள் கோவில் நுாலகத்திற்கு புதிய கட்டடம் அமைக்க வலியுறுத்தல்


ADDED : நவ 05, 2024 11:32 PM

Google News

ADDED : நவ 05, 2024 11:32 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலை நகர்:சிங்கபெருமாள் கோவில் சந்தைமேட்டு தெருவில் கிளை நுாலகம் செயல்பட்டு வருகிறது. இந்த நுாலகம், 1996ல் கட்டப்பட்டது. இதில் சிறுகதைகள், இலக்கியங்கள், வரலாற்று புத்தகங்கள் என, 40,000த்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன.

பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர், இல்லத்தரசியர் 2,500க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக இருந்து வருகின்றனர். இந்த நுாலக கட்டடம், சாலையை விட மூன்று அடி தாழ்வாக உள்ளதால், மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குகிறது.

கட்டடம் கட்டப்பட்டு, 30 ஆண்டுகளை கடந்ததால், சுவர்கள் மற்றும் மேல் தளங்களின் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும், ஜன்னல் மற்றும் மின் இணைப்புகள் சேதமடைந்து காணப்படுகிறது.

இது குறித்து வாசகர்கள் கூறியதாவது:

நுாலக கட்டடம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. மழைக்காலங்களில் சுவர்களில் ஈரப்பதம் உள்ள போது மின்சாரம் பாய்வதும் தொடர்கிறது.

கட்டடம் சேதமடைந்து உள்ளதால், போட்டி தேர்வுகளுக்கு குறிப்பு எடுக்க வருவோர், அமர்ந்து படிக்க அச்சப்படுகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகத்தின் பழைய கட்டடத்தை இடித்து அகற்றி விட்டு, அதே இடத்தில் புதிதாக நவீன நுாலக கட்டடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us