sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் இடைக்கழிநாடு பேரூராட்சி தாமதம்

/

ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் இடைக்கழிநாடு பேரூராட்சி தாமதம்

ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் இடைக்கழிநாடு பேரூராட்சி தாமதம்

ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் இடைக்கழிநாடு பேரூராட்சி தாமதம்


ADDED : நவ 12, 2024 07:15 PM

Google News

ADDED : நவ 12, 2024 07:15 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செய்யூர்:செய்யூர் அருகே உள்ள இடைக்கழிநாடு பேரூராட்சியில், துப்புரவு பணியாளர்கள், அலுவலக உதவியாளர், மின் மோட்டார் ஆப்பரேட்டர், கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர், டெங்கு நோய் தடுப்பு பணியாளர் மற்றும் தெரு விளக்கு பராமரிப்பாளர் என, 124 பேர் பணிபுரிந்து வருகின்றனர்.

பேரூராட்சியில் பணியாற்றும் ஊழியர்களுக்கு, 10ம் தேதிக்குள் பேரூராட்சி சார்பாக சம்பளம் வழங்கப்படுவது வழக்கம். ஆனால், இந்த மாதம் தற்போது வரை சம்பளம் வழங்கப்படவில்லை என, பேரூராட்சி ஊழியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுகுறித்து, பெயர் குறிப்பிட விரும்பாத பேரூராட்சி ஊழியர் ஒருவர் கூறியதாவது:

இடைக்கழிநாடு பேரூராட்சியில், 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். ஒவ்வொரு மாதமும், 10ம் தேதிக்குள் சம்பளம் வழங்கப்படுவது வழக்கம்.

சில மாதங்களாக தாமதமாக சம்பளம் வழங்கப்படுகிறது. இந்த மாதம், தற்போது வரை சம்பளம் வழங்கப்படவில்லை.

துப்புரவு பணியாளராக பணி புரியும், பொருளாதாரத்தில் பின் தங்கிய குடும்பத்தினர், தாமதமாக சம்பளம் வழங்கப்படுவதால், வங்கி கடன்களை செலுத்தவும், அன்றாட வாழ்க்கைக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கவும் முடியாமல் அவதிப்படுகின்றனர்.

ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள், பேரூராட்சி ஊழியர்களுக்கு விரைந்து சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us