sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

மாமல்லையில் சர்வதேச சுற்றுலா தினம் விமரிசை

/

மாமல்லையில் சர்வதேச சுற்றுலா தினம் விமரிசை

மாமல்லையில் சர்வதேச சுற்றுலா தினம் விமரிசை

மாமல்லையில் சர்வதேச சுற்றுலா தினம் விமரிசை


ADDED : செப் 28, 2024 12:33 AM

Google News

ADDED : செப் 28, 2024 12:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மாமல்லபுரம்:சர்வதேச சுற்றுலா தினமாக, செப்., 27ம் தேதி, உலக நாடுகளில் கடைப்பிடிக்கப் படுகிறது. இந்நாளான நேற்று, தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில், மாமல்லபுரத்தில், சுற்றுலா மற்றும் அமைதி என்ற கருப்பொருளில், விமரிசையாக கொண்டாடப்பட்டது.

சுற்றுலாத் துறையினர், சுற்றுலா அலுவலர் சக்திவேல் தலைமையில், கடற்கரை கோவில் பகுதியில், சர்வதேச பயணியருக்கு மாலை அணிவித்து, குங்குமம், சந்தின திலகமிட்டு வரவேற்றனர்.

தமிழக நாட்டுப்புற கலைஞர்கள், கரகம் உள்ளிட்ட நாட்டுப்புற நடனம் மற்றும் ராஜஸ்தான் கலைஞர்கள் அவர்களின் நடன நிகழ்ச்சிகளை நிகழ்த்தினர். பயணியரும் உற்சாகத்துடன் நடனமாடி மகிழ்ந்தனர்.

சப் - கலெக்டர் நாராயணசர்மா, விழிப்புணர்வு பேரணியை துவக்கிவைத்தார். அதில், அரசு கட்டடம் மற்றும் சிற்பக்கலை கல்லுாரி மற்றும் தனியார் கல்லுாரி, பள்ளிகளைச் சேர்ந்த மாணவ - மாணவியர், சுற்றுலா அலுவலகம் வரை பேரணியாக சென்றனர்.

சென்னை பைக்கர்ஸ் கிளப் குழுவினர், இருசக்கர வாகனங்களில் அணிவகுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

அதைத்தொடர்ந்து, தனியார் விடுதியில் தேசியக்கொடியை போல் வண்ண பலுான்கள் பறக்கவிட்டு, விழா நோக்க கருப்பொருள் கேக் வெட்டினர்.

பல்வேறு விடுதிகளின் நிர்வாகிகள், சுற்றுலா மேம்பாடு, மனம் அமைதி அடைவது, சுற்றுலாவால் பொருளாதார வளர்ச்சியடைவது குறித்து பேசினர்.

அதை தொடர்ந்து, பாரம்பரிய நடனம், நாட்டுப்புற கலை நிகழ்ழ்சிகள் நடந்தன. விழாவில், பேச்சு, கட்டுரை, ஓவியம் ஆகிய போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ - மாணவியருக்கு பரிசளிக்கப்பட்டது. பேரூராட்சித் தலைவர் வளர்மதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us