sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

உண்டியலில் விழுந்த ஐபோன் முருகனுக்கே... திருப்போரூர் கோவிலில் சுவாரசிய சம்பவம்

/

உண்டியலில் விழுந்த ஐபோன் முருகனுக்கே... திருப்போரூர் கோவிலில் சுவாரசிய சம்பவம்

உண்டியலில் விழுந்த ஐபோன் முருகனுக்கே... திருப்போரூர் கோவிலில் சுவாரசிய சம்பவம்

உண்டியலில் விழுந்த ஐபோன் முருகனுக்கே... திருப்போரூர் கோவிலில் சுவாரசிய சம்பவம்

1


ADDED : டிச 21, 2024 01:02 AM

Google News

ADDED : டிச 21, 2024 01:02 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்போரூர்:திருப்போரூரில், புகழ்பெற்ற கந்தசுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு சென்னை, அம்பத்துார், விநாயகபுரத்தைச் சேர்ந்த தினேஷ் என்பவர், கடந்த ஆகஸ்டில் தரிசனம் செய்ய வந்துள்ளார்.

குடும்ப பிரச்னை காரணமாக மன அழுத்தத்தில் இருந்த அவர், கோவில் உண்டியலில் காணிக்கை செலுத்தும் போது, தன்னுடைய 'ஐபோன் 13புரோ' ரக மொபைல்போனையும், தவறி போட்டுள்ளார்.

அதன் பின், கோவில் நிர்வாகத்திடம் நடந்ததைக் கூறி, மொபைல்போனை திரும்பக் கேட்டுள்ளார்.

அதற்கு கோவில் நிர்வாகத்தினர், கோவில் உண்டியலில் செலுத்தப்படும் அனைத்தும் சுவாமிக்கு சொந்தம் எனக் கூறியுள்ளனர்.

மேலும், மொபைல் போன் தொடர்பாக, ஹிந்து அறநிலையத்துறை உயரதிகாரிகளிடம் மனு கொடுத்து கேட்கலாம் எனக் கூறிய நிர்வாகத்தினர், உண்டியல் காணிக்கை எண்ணும்போது தகவல் அளிப்பதாக கூறி அனுப்பியுள்ளனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் அதிகாரிகள் முன்னிலையில் கோவில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. முன்னதாக, தினேஷுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவரும் வந்திருந்தார்.

உண்டியலை திறந்து பணத்தை எடுத்த போது, அவரது மொபைல்போனும் அதில் இருந்தது.

அப்போது தினேஷ் மொபைல் போனை கேட்டுள்ளார். இதற்கு கோவில் நிர்வாகத்தினர், 'உண்டியலில் போட்டவை முருகனுக்கு சொந்தம். மொபைல் போனை தர முடியாது' எனக் கூறியுள்ளனர்.

வேண்டுமென்றால், மொபைல் போனில் உள்ள தரவுகளை மட்டும் பெற்றுக் கொள்ளளாம் எனக் கூறியுள்ளனர்.

அதற்கு தினேஷ், தன்னிடம் தரவுகளை பெற லேப்டாப் உள்ளிட்டவை இல்லை.

ஓரிரு நாளில் ஏற்பாட்டுடன் வந்து தரவுகளை பதிவிறக்கம் செய்து கொள்வதாக கூறியுள்ளார். பின் அந்த மொபைல்போன், அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us