sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் இருமுடி விழா துவக்கம்

/

ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் இருமுடி விழா துவக்கம்

ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் இருமுடி விழா துவக்கம்

ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் இருமுடி விழா துவக்கம்


ADDED : டிச 16, 2024 02:08 AM

Google News

ADDED : டிச 16, 2024 02:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேல்மருவத்துார்:ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், தைப்பூச ஜோதி சக்தி மாலை இருமுடி விழா, நேற்று துவங்கியது.

செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், தைப்பூச ஜோதி விழாவையொட்டி, சக்தி மாலை இருமுடி விழா ஆண்டுதோறும் நடக்கிறது.

இதில் ஐந்து அல்லது மூன்று நாட்கள் சக்தி விரதம் இருந்து, ஆண்கள், பெண்கள், குழந்தைகள் சக்திமாலை அணிந்து, அம்மனுக்கு இருமுடி எடுத்து வந்து, சுயம்பு அன்னைக்கு அபிஷேகம் செய்வர்.

இந்த ஆண்டு, தைப்பூச ஜோதி சக்தி மாலை இருமுடி விழாவையொட்டி, ஆதிபராசக்தி அம்மனுக்கு, நேற்று அதிகாலை 3:00 மணிக்கு, சிறப்பு அபிஷேகம் மற்றும் இயற்கை வழிபாடு நடந்தது.

சக்திமாலை இருமுடி அபிஷேகத்தை, ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் துவக்கி வைத்தார். ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க துணைத்தலைவர்கள் அன்பழன், செந்தில்குமார், ஸ்ரீதேவி ரமேஷ், ஆதிபராசக்தி செவிலியர் கல்லுாரி தாளாளர் டாக்டர் ஸ்ரீலேகா செந்தில்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

விழா, 2025 பிப்ரவரி 10ம் தேதி வரை நடைபெறும். 11ம் தேதி, தைப்பூச ஜோதி விழா நடக்கிறது.

செவ்வாடை பக்தர்களுக்கு, தகவல் மையம், முதலுதவி, சுகாதாரம், வாகனங்கள் நிறுத்தம் இடம், ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.கோவிலுக்கு வரும் வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தாமல், வாகனங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில், நிறுத்த வேண்டும் என, சித்தர் பீட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. பக்தர்களுக்கு, சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி, அயோத்தி உள்ளிட்ட இடங்களில் இருந்து, வரும் ரயில்கள், மேல்மருவத்துார் ரயில் நிலையத்தில் நின்று செல்லும். வழக்கமாக செல்லும் அனைத்து விரைவு ரயில்களும் நின்று செல்லும். விழா ஏற்பாடு ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

***






      Dinamalar
      Follow us