sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

6வது மாடியில் இருந்து குதித்த ஐ.டி., ஊழியர்

/

6வது மாடியில் இருந்து குதித்த ஐ.டி., ஊழியர்

6வது மாடியில் இருந்து குதித்த ஐ.டி., ஊழியர்

6வது மாடியில் இருந்து குதித்த ஐ.டி., ஊழியர்


ADDED : ஜூன் 12, 2025 11:09 PM

Google News

ADDED : ஜூன் 12, 2025 11:09 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெருங்களத்துார்:திருவொற்றியூரைச் சேர்ந்தவர் சூரிய பிரகாஷ், 26. பெருங்களத்துாரில் உள்ள தனியார் ஐ.டி., நிறுவனத்தில், நான்கு ஆண்டுகளாக பணியாற்றி வந்தார்.

வழக்கம்போல, நேற்று முன்தினம் சூரிய பிரகாஷ் பணிக்கு சென்றுள்ளார். அப்போது, அவரது மொபைல் போனுக்கு ஒரு அழைப்பு வந்ததாக கூறப்படுகிறது.

பேசி முடித்ததும், அவசர அவசரமாக அலுவலகத்தில் இருந்து ஆறாவது மாடிக்கு சென்று, அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துக் கொண்டார். போலீசார் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

பீர்க்கன்காரணை போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், சூரிய பிரகாஷ் நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்து பெண், திடீரென பேசுவதை நிறுத்தி காதலை மறுத்ததாகவும், அதன் காரணமாக ஆறாவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்ததும் தெரிய வந்துள்ளது.

போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us