sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

செங்கையில் நாளை வேலை வாய்ப்பு முகாம்

/

செங்கையில் நாளை வேலை வாய்ப்பு முகாம்

செங்கையில் நாளை வேலை வாய்ப்பு முகாம்

செங்கையில் நாளை வேலை வாய்ப்பு முகாம்


ADDED : நவ 14, 2024 01:49 AM

Google News

ADDED : நவ 14, 2024 01:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு:செங்கல்பட்டில், தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம், நாளை நடக்கிறது என, அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, கலெக்டர் அருண்ராஜ் அறிக்கை:

செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் இணைந்து, தனியார் வேலை வாய்ப்பு முகாமை, நாளை நடத்துகின்றன.

இம்முகாமில், 50க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் மற்றும் திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. இந்நிறுவனங்களில், 5,000 பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தி, தகுதியானோர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இதில், எட்டாம் வகுப்பு, 10ம் வகுப்பு, பிளஸ் 2 மற்றும் பட்டப்படிப்பு, பி.இ., -- ஐ.டி.ஐ., டிப்ளமா, செவிலியர்கள், மருந்தாளுனர், ஆய்வக உதவியாளர் போன்ற கல்வி தகுதி உடையவர்கள் பங்கேற்கலாம்.

வயது 18 முதல் 40 வரை உள்ளவர்கள், தங்களுடைய கல்வி சான்றிதழ்கள், பயோ டேட்டா மற்றும் பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்துடன் வர வேண்டும்.

தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் பணி நியமனம் பெறுவோரின் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது. மேலும் விபரங்களுக்கு, 044 - 2742 6020, 63834 60933ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us