sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கீரப்பாக்கம் சாலை சீரமைப்பு பணி

/

வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கீரப்பாக்கம் சாலை சீரமைப்பு பணி

வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கீரப்பாக்கம் சாலை சீரமைப்பு பணி

வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கீரப்பாக்கம் சாலை சீரமைப்பு பணி


ADDED : மார் 14, 2024 07:55 PM

Google News

ADDED : மார் 14, 2024 07:55 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடுவாஞ்சேரி:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், கீரப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட காட்டூர் முதல் அருங்கால் வரை உள்ள 800 மீட்டர் சாலை, வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இப்பகுதி சாலை மேடு, பள்ளமாகவும், குண்டும் குழியுமாகவும் பல ஆண்டுகளாக இருந்து வந்தது. தற்போது, அச்சாலையை சீரமைத்து தார்ச் சாலை அமைக்கும் பணி துவங்கியது.

இது குறித்து, கீரப்பாக்கம் ஊராட்சி தலைவி செல்வ சுந்தரி கூறியதாவது:

கீரப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட காட்டூர் முதல் அருங்கால் வரை, சாலையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து, போக்குவரத்துக்கு லாயக்கற்ற முறையில் இருந்தது.

சாலையை பராமரிப்பதற்காக, 60 ஆண்டு காலத்திற்கு மேல் போராடி, இப்போது தான் வெற்றி பெற்றுள்ளோம்.

இந்த சாலையை சீரமைப்பதற்காக, தலைவர், துணைத் தலைவர், கவுன்சிலர்கள், சமூக நல அலுவலர்கள் என, அனைவரின் ஒட்டுமொத்த முயற்சி பெரும்பங்கு வகிக்கிறது.

எனவே, சாலை பணிகளை விரைவாக முடித்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us