sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

ஆபாச வீடியோ பதிவிட்ட கேரள நபர் கைது

/

ஆபாச வீடியோ பதிவிட்ட கேரள நபர் கைது

ஆபாச வீடியோ பதிவிட்ட கேரள நபர் கைது

ஆபாச வீடியோ பதிவிட்ட கேரள நபர் கைது


ADDED : டிச 21, 2024 11:49 PM

Google News

ADDED : டிச 21, 2024 11:49 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, சென்னை, மேற்கு மண்டல சைபர் கிரைம் காவல் நிலையத்தில், கடந்த, 4ம் தேதி, புகார் ஒன்று கொடுக்கப்பட்டது.

அதில், 'சிக்னல் என்ற மொபைல் செயலியில் குழுக்களை ஆரம்பித்து, குழந்தைகள் ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிடுகின்றனர். அதை சமூக வலைதளங்களிலும் பதிவிட்டு வருகின்றனர். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என குறிப்பிட்டிருந்தது.

இது குறித்து வழக்கு பதிவு செய்த மேற்கு மண்டல சைபர் கிரைம் போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இதில், தெலுங்கானா மாநிலம், ரங்காரெட்டி மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கா ரகுநாத் ரெட்டி, 22, என்பவர், குழந்தைகள் ஆபாச வீடியோக்களை 'சிக்னல்' செயலியில் பதிவிறக்கம் செய்து, எக்ஸ், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டது தெரியவந்தது.

கடந்த, 10ம் தேதி வெங்கா ரகுநாத் ரெட்டியை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

இவ்வழக்கில் தொடர்புடைய, கேரளா மாநிலத்தைச் சேர்ந்த ஸ்ரீஹரி, 23, என்பவரை, சைபர் கிரைம் போலீசார், நேற்று கைது செய்தனர். அவரிடம் இருந்து ஒரு மொபைல் போனை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us