/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கந்தசுவாமி கோவிலில் கிருத்திகை விழா
/
கந்தசுவாமி கோவிலில் கிருத்திகை விழா
ADDED : ஏப் 29, 2025 11:54 PM
திருப்போரூர், திருப்போரூரில், பிரசித்தி பெற்ற கந்தசுவாமி கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் தை, மாசி, சித்திரை, ஆடி மாதங்களில் கிருத்திகை விழா முக்கிய விழாவாக கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில் நேற்று, சித்திரை கிருத்திகை விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.
விழாவையொட்டி, அதிகாலை 3:00 மணிக்கு நடை திறக்கப்பட்டது. பின், சிறப்பு அர்ச்சனைகளும், தீபாராதனைகளும் சுவாமிக்கு செய்யப்பட்டன.
விழாவில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் வேண்டுதல்களை நிறைவேற்றினர்.
இரவு 7:00 மணிக்கு வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய கந்தசுவாமி பெருமானின் திருவீதியுலா, மாட வீதிகளில் வந்தது.  ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

