sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

கருநிலம் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம் விமரிசை

/

கருநிலம் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம் விமரிசை

கருநிலம் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம் விமரிசை

கருநிலம் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம் விமரிசை


ADDED : நவ 09, 2024 12:35 AM

Google News

ADDED : நவ 09, 2024 12:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலை நகர்:சிங்கபெருமாள் கோவில் அடுத்த கருநிலம் கிராமத்தில், லட்சுமி நாராயண பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவில், ஹிந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இந்த கோவிலில், கடந்த 2011ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இந்த கோவிலில் முன் பக்கமும், அருகில் உள்ள பக்த ஆஞ்சநேயர் சன்னிதி முன் என, இரு விமான மண்டபங்கள் கட்டி கும்பாபிஷேகம் நடத்த, கிராம மக்கள் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் முடிவு செய்தனர்.

ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில், 2 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்பட்டு, கடந்த ஓராண்டாக பணிகள் நடைபெற்று வந்தன. சமீபத்தில், கட்டுமான பணிகள் நிறைவடைந்ததையடுத்து, கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, நேற்று முன்தினம் மஹா சாந்தி ஹோமம், பூர்ணாஹுதி, வேத பிரபந்த சாற்று முறை நடத்தப்பட்டது. நேற்று காலை, விஸ்வரூப தரிசனம், மூன்றாம் கால யாக பூஜை நடத்தப்பட்டது.

தொடர்ந்து, யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீர், கோபுர கலசங்களில் ஊற்றி, மஹா கும்பாபிஷேகம் விமரிசையாக நடத்தப்பட்டது. இதில், கருநிலம், கோவிந்தாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.






      Dinamalar
      Follow us