/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வெண்ணாங்குபட்டு கெங்கையம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் விமரிசை
/
வெண்ணாங்குபட்டு கெங்கையம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் விமரிசை
வெண்ணாங்குபட்டு கெங்கையம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் விமரிசை
வெண்ணாங்குபட்டு கெங்கையம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் விமரிசை
ADDED : அக் 21, 2024 01:16 AM

செய்யூர்:செய்யூர் அடுத்த இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட வெண்ணாங்குப்பட்டு கிராமத்தில், கெங்கையம்மன் கோவில் உள்ளது. கோவிலை புனரமைத்து, கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்த கிராமத்தினர், கடந்த 3 ஆண்டுகளாக திருப்பணி மேற்கொண்டனர்.
திருப்பணிகள் முடிந்ததை அடுத்து, கும்பாபிஷேகத்திற்கான யாகசாலை பூஜைகள், 18ம் தேதி துவங்கின. தொடர்ந்து, கணபதி பூஜை, விக்னேஸ்வர பூஜை, நவக்கிரக பூஜை, கோ பூஜை நடந்தது.
அதையடுத்து, நேற்று காலை 10:00 மணிக்கு, கெங்கையம்மன் கோவில் கோபுர விமானத்திற்கும், 10:15 மணிக்கு மூலவருக்கும் கும்பாபிஷேகம் நடந்தது.
பின், கெங்கையம்மனுக்கு வண்ண மலர்களால் சிறப்பு அலங்கரம் செய்யப்பட்டு, தீப ஆராதனை காட்டப்பட்டது. வெண்ணாங்குப்பட்டு மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் வசிக்கும் ஏராளமான பக்தர்கள் திரளாக வந்து, சுவாமியை வழிபட்டுச் சென்றனர்.

