/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நெடுஞ்சாலையில் குவிந்துள்ள ஏரி மண்ணால் விபத்து அபாயம்
/
நெடுஞ்சாலையில் குவிந்துள்ள ஏரி மண்ணால் விபத்து அபாயம்
நெடுஞ்சாலையில் குவிந்துள்ள ஏரி மண்ணால் விபத்து அபாயம்
நெடுஞ்சாலையில் குவிந்துள்ள ஏரி மண்ணால் விபத்து அபாயம்
ADDED : ஆக 28, 2025 02:02 AM

செய்யூர்:நல்லுார் - வில்லிப்பாக்கம் நெடுஞ்சாலையில் குவிந்துள்ள ஏரி மண்ணால், வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகி வருகின்றனர்.
மாமல்லபுரம்- - புதுச்சேரி இடையிலான கிழக்கு கடற்கரை சாலையை, நான்கு வழி சாலையாக விரிவாக்கம் செய்யும் பணி இரண்டு ஆண்டுகளாக நடந்து வருகிறது. முதற்கட்டமாக, மாமல்லபுரம் - மரக்காணம் இடையே, திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இச்சாலையில் தாழ்வாக உள்ள பகுதிகள், பாலங்கள் அமையும் இடங்களில், லாரிகளில் மண் கொண்டு வரப்பட்டு, கொட்டி உயர்த்தி அமைக்கப்பட்டு வருகிறது.
நல்லுார் - வில்லிப்பாக்கம் மாநில நெடுஞ்சாலையின் ஓரத்தில், செய்யூர் அடுத்த வாழைப்பட்டு ஏரியில் இருந்து மண் எடுக்கும் பணி நடந்து வருகிறது.
ஏரியில் இருந்து மண் எடுத்துச் செல்லும் லாரிகள், அதிக பாரம் ஏற்றி, தார்ப்பாய் மூடாமல் செல்வதால், லாரியில் இருந்து சிதறும் ஏரி மண், சாலையில் குவிந்துள்ளது.
ஏரி மண், களிமண் தன்மை உடையதால், சாலையில் ஒட்டிக் கொண்டுள்ளது. மழை பெய்தால், அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், இதில் வழுக்கி விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர்.
துறை சார்ந்த அதிகாரிகள் சாலையோரம் குவிந்துள்ள ஏரி மண்ணை அகற்றுவதோடு, மண் ஏற்றிச் செல்லும் லாரிகள் தார்ப்பாய் மூடி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

