sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

தாம்பரம் நீதிமன்றத்துடன் 10 கிராமங்களை இணைக்க கோரி வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

/

தாம்பரம் நீதிமன்றத்துடன் 10 கிராமங்களை இணைக்க கோரி வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

தாம்பரம் நீதிமன்றத்துடன் 10 கிராமங்களை இணைக்க கோரி வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

தாம்பரம் நீதிமன்றத்துடன் 10 கிராமங்களை இணைக்க கோரி வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்


ADDED : ஏப் 29, 2025 12:13 AM

Google News

ADDED : ஏப் 29, 2025 12:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாம்பரம், செங்கல்பட்டு மாவட்டத்தில், 9 தாலுகாக்கள் உள்ளன. ஒவ்வொரு தாலுகாவிற்கும், ஒரு நீதிமன்றம் இயங்கி வருகிறது.

நீதிமன்றங்களை பொறுத்தவரை, அந்தந்த தாலுகாவில் உள்ள வழக்குகள், அந்தந்த நீதிமன்றங்களில் தான் நடக்கின்றன.

ஒவ்வொரு தாலுகாவிற்கும், மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் இருக்க வேண்டும். தாம்பரம் தாலுகாவில், 1994ம் ஆண்டு மாவட்ட நீதிமன்றம் ஆரம்பிக்கப்பட்டது.

இத்தாலுகாவில், தாம்பரம், சிட்லப்பாக்கம், மேடவாக்கம், மாடம்பாக்கம் என, நான்கு உள்வட்டங்கள் உள்ளன.

தாம்பரம், சிட்லப்பாக்கம் உள்வட்டங்களில் உள்ள அனைத்து வழக்குகளும், தாம்பரம் நீதிமன்றத்தில் நடக்கின்றன.

மேடவாக்கம் உள்வட்டத்தில் உள்ள எட்டு கிராமங்களில், வேங்கைவாசல் கிராமத்திற்கான வழக்கு மட்டும், தாம்பரத்தில் நடக்கிறது. மற்ற ஏழு கிராமங்களில் உள்ள வழக்குகள், ஆலந்துார் நீதிமன்றத்தில் நடக்கின்றன.

இதேபோல், மாடம்பாக்கம் உள்வட்டத்தில் உள்ள மூன்று கிராமங்களின் வழக்குகள், ஆலந்துார் நீதிமன்றத்தில் நடக்கின்றன.

இதை சரிசெய்து, 10 கிராமங்களின் வழக்குகளை, தாம்பரம் நீதிமன்றத்துடன் இணைக்க வேண்டும் என, வழக்கறிஞர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

இந்நிலையில், 10 கிராமங்களை, தாம்பரம் நீதிமன்றத்துடன் இணைக்க வலியுறுத்தி, தாம்பரம் வழக்கறிஞர்கள், மூன்று நாள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை, நேற்று துவங்கினர்.

இது குறித்து, வழக்கறிஞர்கள் கூறியதாவது:

இப்பிரச்னை தொடர்பாக, கடந்த ஆண்டு, ஜூன் மாதம், சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்த கூட்டத்திலும், இது தொடர்பாக எடுத்துரைக்கப்பட்டது.

அப்படியிருந்தும், இதுவரை, 10 கிராமங்கள் தாம்பரத்துடன் இணைக்கப்படவில்லை. சோழிங்கநல்லுார் தாலுகாவை பிரிக்கும் போது, இந்த குளறுபடி நடந்துள்ளது.

தாம்பரம் தாலுகாவில் உள்ள பத்து கிராமங்களை சேர்ந்த வழக்குகள், ஆலந்துார் நீதிமன்றத்தில் நடப்பதால், வழக்காடிகளும், வழக்கறிஞர்களும் பாதிக்கப்படுகின்றனர்.

இதேபோல், கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் என்றால், செங்கல்பட்டிற்கு செல்ல வேண்டும்.

இதனால், பெரிய நிலம் சம்பந்தமான மற்றும் கொலை வழக்குகள் தொடர்பான விசாரணைக்கு, ஒவ்வொரு முறையும் செங்கல்பட்டிற்கு செல்ல வேண்டியுள்ளது. இதனால், நேரமும், பணமும் வீணாகிறது.

அதனால், தாம்பரத்தில் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் அமையும்பட்சத்தில், வழக்கறிஞர்களும், வழக்காடிகளும் அலைய வேண்டிய நிலைமை தவிர்க்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us