sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

சிறுமி பலாத்கார வழக்கு இருவருக்கு 'ஆயுள்'

/

சிறுமி பலாத்கார வழக்கு இருவருக்கு 'ஆயுள்'

சிறுமி பலாத்கார வழக்கு இருவருக்கு 'ஆயுள்'

சிறுமி பலாத்கார வழக்கு இருவருக்கு 'ஆயுள்'


ADDED : பிப் 17, 2024 12:40 AM

Google News

ADDED : பிப் 17, 2024 12:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு, காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி, பெற்றோரை இழந்து, அவரது பாட்டி வீட்டில் வசித்தார். அதே பகுதியைச் சேர்ந்த ஹரி, 28, கங்காதரன், 21 ஆகியோர், சிறுமியை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்தனர். இதில் கர்ப்பமான சிறுமிக்கு, 2021 டிச., 10ம் தேதி பெண் குழந்தை பிறந்தது.

வாலிபர்கள் இருவரையும் கைது செய்து, காஞ்சிபுரம் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு தொடுத்தனர். வழக்கு விசாரணை செங்கல்பட்டு 'போக்சோ' நீதிமன்றத்தில், நீதிபதி தமிழரசி முன்னிலையில் நடைபெற்றது. மரபணு பரிசோதனையில், சிறுமியின் குழந்தைக்கு தந்தை ஹரி என தெரியவந்தது.

விசாரணை முடிந்து குற்றம் நிரூபிக்கப்பட்டதால், ஹரி, கங்காதரன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், தலா 15,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. கட்ட தவறினால், மேலும் ஓராண்டு சிறை தண்டனையும் விதித்து, நீதிபதி தமிழரசி நேற்று தீர்ப்பளித்தார்.

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக, 5 லட்சம் ரூபாய் தமிழக அரசு வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us