sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

செங்கையில் கால்நடை கணக்கெடுப்பு பணி... துவக்கம்! புதிய மருந்தகங்கள் ஏற்படுத்தவும் நடவடிக்கை

/

செங்கையில் கால்நடை கணக்கெடுப்பு பணி... துவக்கம்! புதிய மருந்தகங்கள் ஏற்படுத்தவும் நடவடிக்கை

செங்கையில் கால்நடை கணக்கெடுப்பு பணி... துவக்கம்! புதிய மருந்தகங்கள் ஏற்படுத்தவும் நடவடிக்கை

செங்கையில் கால்நடை கணக்கெடுப்பு பணி... துவக்கம்! புதிய மருந்தகங்கள் ஏற்படுத்தவும் நடவடிக்கை


ADDED : நவ 05, 2024 06:58 AM

Google News

ADDED : நவ 05, 2024 06:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டத்தில், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், 21வது கால்நடை கணக்கெடுப்பு பணி நேற்று துவங்கி, வரும் பிப்ரவரி மாதம் வரை நடைபெறுகிறது. மாவட்டம் முழுதும் புதிய கால்நடை மருந்தகங்கள் ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

செங்கல்பட்டு மாவட்டத்தில், அச்சிறுபாக்கம், மதுராந்தகம், சித்தாமூர், லத்துார், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், காட்டாங்கொளத்துார், புனிததோமையார்மலை ஆகிய வட்டாரங்கள் உள்ளன.

மாவட்டத்தில், செங்கல்பட்டு, சிட்லப்பாக்கம் ஆகிய பகுதிகளில் கால்நடை மருத்துவமனைகள், 61 கால்நடை மருந்தகங்கள், 24 கால்நடை கிளை மருந்தகங்கள் உள்ளன. இங்கு, மாடு, எருமை, நாய், பன்றி, கோழி, வாத்து உள்ளிட்ட அனைத்து வகையான கால்நடைகளுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மத்திய அரசின் சார்பில், ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை கணக்கெடுப்பு பணி, கால்நடை பராமரிப்புத்துறை வாயிலாக நடத்தப்படுவது வழக்கம்.

இதைத்தொடர்ந்து, கடந்த 2019ம் ஆண்டு, 20வது கால்நடை கணக்கெடுப்பு நடத்தப்பட்டதில், மாவட்டத்தில் எட்டு வட்டாரங்களில், 4 லட்சத்து 1,543 கால்நடைகள் இருப்பது கண்டறியப்பட்டது. அதன்பின், கால்நடைகளுக்கு தேவையான தடுப்பூசிகள், மருந்துகளை மத்திய, மாநில அரசுகள் ஒதுக்கீடு செய்கின்றன.

செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், 21வது கால்நடை கணக்கெடுப்பு பணியை, கலெக்டர் அருண்ராஜ், நேற்று துவக்கி வைத்தார்.

காஞ்சிபுரம் மண்டல இணை இயக்குனர் டாக்டர் ஜெயந்தி, துணை இயக்குனர் சுந்தரேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மாவட்டத்தில், நேற்று துவங்கிய கணக்கெடுப்பு பணி வரும் பிப்ரவரி மாதம் வரை நடக்கிறது.

இப்பணியில், தன்னார்வலர்கள் 113 பேர் மற்றும் கால்நடைத்துறை பணியாளர்கள் 47 பேர் என, 160 பேர் மற்றும் மேற்பார்வையாளர்களாக 34 டாக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள், கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கால்நடைகள் தொடர்பான வளர்ச்சி திட்டங்கள் மற்றும் கால்நடைகளின் நலனுக்கான சரியான தரவுகள் தருவதற்காக, கால்நடை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

இதில், வீடுகள், கடைகள், தோட்டம், பண்ணைகளில் உள்ள மாடு, எருமை, ஆடு, குதிரை, நாய், பன்றி, கோழி, வாத்து போன்ற அனைத்து வகையான கால்நடைகளும் கணக்கெடுக்கப்படும். இந்த கணக்கெடுப்பின்போது, கால்நடைகள் விபரங்களை, பொதுமக்கள் தெரிவிக்கலாம்.

மத்திய அரசு சார்பில், ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை கால்நடைகள் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இந்த கணக்கெடுப்பு நடத்துவதால், கால்நடைகளுக்கு தேவையான தடுப்பூசிகள், மருந்துகள் வாங்க முடியும். கால்நடை மருந்தகங்கள் தரம் உயர்வு, புதிய கிளை நிலையங்கள் ஏற்படுத்தலாம்.

- டாக்டர் ப.ஜெயந்தி,

மண்டல இணை இயக்குனர், காஞ்சிபுரம் மாவட்ட கால்நடைத் துறை






      Dinamalar
      Follow us