sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

பூண்டியில் கால்நடை மருத்துவமனை அமைக்க பகுதிவாசிகள் கோரிக்கை

/

பூண்டியில் கால்நடை மருத்துவமனை அமைக்க பகுதிவாசிகள் கோரிக்கை

பூண்டியில் கால்நடை மருத்துவமனை அமைக்க பகுதிவாசிகள் கோரிக்கை

பூண்டியில் கால்நடை மருத்துவமனை அமைக்க பகுதிவாசிகள் கோரிக்கை


ADDED : ஏப் 23, 2025 07:53 PM

Google News

ADDED : ஏப் 23, 2025 07:53 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்போரூர்:பூண்டி கிராமத்தில் கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டுமென, பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை எழுந்துள்ளது.

திருப்போரூர் அருகே, பூண்டி கிராமம் உள்ளது. இக்கிராமத்தைச் சுற்றி ராயமங்கலம், முள்ளிப்பாக்கம், எடர்குன்றம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன.

இங்கு, விவசாயிகள் அதிக அளவில் கால்நடைகள் வளர்த்து வருகின்றனர்.

தங்களது கால்நடைகள் நோய் தாக்குதலுக்கு உள்ளானால் மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சை பெற மானாமதி, கரும்பாக்கம் போன்ற பகுதிகளில் உள்ள கால்நடை மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டியுள்ளது.

இதனால் உடனுக்குடன் சிகிச்சை பெற முடியாத நிலையும், வீண் அலைச்சலும் ஏற்படுகிறது.

எனவே, சுற்றுப்புற பகுதி விவசாயிகளின் நலன் கருதி, பூண்டி கிராமத்தில் கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டும் என இப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.






      Dinamalar
      Follow us