sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

வேடந்தாங்கலில் சமுதாய நலக்கூடம் அமைக்க பகுதிவாசிகள் எதிர்பார்ப்பு

/

வேடந்தாங்கலில் சமுதாய நலக்கூடம் அமைக்க பகுதிவாசிகள் எதிர்பார்ப்பு

வேடந்தாங்கலில் சமுதாய நலக்கூடம் அமைக்க பகுதிவாசிகள் எதிர்பார்ப்பு

வேடந்தாங்கலில் சமுதாய நலக்கூடம் அமைக்க பகுதிவாசிகள் எதிர்பார்ப்பு


ADDED : டிச 28, 2024 01:12 AM

Google News

ADDED : டிச 28, 2024 01:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுராந்தகம்:அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்டு, வேடந்தாங்கல் ஊராட்சி அமைந்துள்ளது.

வேடந்தாங்கல் ஊராட்சிக்கு உட்பட்டு சித்தாத்துார், துறையூர், விநாயகநல்லுார் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன.இப்பகுதியில், 5,000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

இங்குள்ள மக்கள் விவசாயம் மற்றும் தனியார் நிறுவனங்களில் தினக்கூலி அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர்.

இப்பகுதி மக்கள் தங்களின், இல்ல சுப நிகழ்ச்சிகளை மதுராந்தகம், கருங்குழி, படாளம், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தனியார் திருமண மண்டபங்களில் நடத்தி வருகின்றனர்.

இதனால் அதிக செலவும், வீண் அலைச்சலும் ஏற்படுகிறது.

வேடந்தாங்கலில், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்த சமுதாய நலக்கூடம், தற்போது விரிசல் அடைந்து, பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

இதை இடித்து அப்புறப்படுத்தி, அதே இடத்தில் புதிதாக சமுதாய நலக்கூடம் மற்றும் உணவு பரிமாறும் இடம், சமையல் தயாரிப்புக் கூடம் என, அனைத்து வசதிகளுடன் கூடிய சமுதாய நலக்கூடம் கட்டினால், கிராமவாசிகள் பயனடைவர். எனவே, துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, புது சமுதாய நலக்கூடம் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us