sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

பூட்டியே கிடக்கும் நேர காப்பாளர் அறை திருப்போரூர் பயணியர் திணறல்

/

பூட்டியே கிடக்கும் நேர காப்பாளர் அறை திருப்போரூர் பயணியர் திணறல்

பூட்டியே கிடக்கும் நேர காப்பாளர் அறை திருப்போரூர் பயணியர் திணறல்

பூட்டியே கிடக்கும் நேர காப்பாளர் அறை திருப்போரூர் பயணியர் திணறல்


ADDED : ஜன 30, 2024 03:41 AM

Google News

ADDED : ஜன 30, 2024 03:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்போரூர்: திருப்போரூர் பேருந்து நிலையத்திலிருந்து, செங்கல்பட்டு, -திருக்கழுக்குன்றம், தாம்பரம் ஆகிய தடங்களில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் விழுப்புரம் கோட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

மற்ற தடங்களில், மாநகர போக்குவரத்துத்கழக பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

திருப்போரூரை சுற்றி, 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இக்கிராம மக்கள், தினமும் திருப்போரூர் வந்து, அங்கிருந்து பேருந்து மூலம் வெளியிடங்களுக்கு சென்று வருகின்றனர்.

அதுமட்டுமின்றி, ஆலத்துார் சிட்கோ, சிறுசேரிசிப்காட் மற்றும் பள்ளிகள்,கல்லுாரிகளுக்கு, தினமும் தொழிலாளர்கள், மாணவர்கள் வந்து செல்கின்றனர்.

திருப்போரூர் பேருந்து நிலையத்தில், பேருந்துகளை ஒழுங்குபடுத்தவும், பயணியருக்கு பேருந்து புறப்படும் நேரம் குறித்து தகவல் தெரிவிக்கவும், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக விழுப்புரம் கோட்டம் மற்றும் மாநகர போக்குவரத்து கழகம் சார்பில், தனித்தனியாக இரண்டு நேர காப்பாளர் அறைகள் அமைக்கப்பட்டன.

அவை, பேருந்துகள் குறித்த விபரம் அறிந்து கொள்ள பயணியருக்கு உதவியாக இருந்தன.

இந்நிலையில், கடந்த ஓராண்டாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக விழுப்புரம் கோட்ட பேருந்து நேரக்காப்பாளர் அறை மட்டும் திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது.

இதனால், பேருந்துகள் புறப்படும் நேரம், வரும் நேரம் குறித்த விபரங்களை பெற முடியாமல், பயணியர் பெரிதும் அவதிப்படுகின்றனர்.

எனவே, பயணியர் நலன் கருதி, மூடிக்கிடக்கும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக விழுப்புரம் கோட்ட பேருந்து நேரக் காப்பாளர்அறையை, மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர, போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை வைத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us