sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

தாழ்வழுத்த மின் வினியோகம் பெருமாட்டுநல்லுாரில் அவதி

/

தாழ்வழுத்த மின் வினியோகம் பெருமாட்டுநல்லுாரில் அவதி

தாழ்வழுத்த மின் வினியோகம் பெருமாட்டுநல்லுாரில் அவதி

தாழ்வழுத்த மின் வினியோகம் பெருமாட்டுநல்லுாரில் அவதி


ADDED : நவ 12, 2024 12:15 AM

Google News

ADDED : நவ 12, 2024 12:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடுவாஞ்சேரி : பெருமாட்டுநல்லுார் ஊராட்சி, பாண்டூர் சுற்றுவட்டார பகுதிகளில், சில நாட்களாக குறைந்த அழுத்தம் கொண்ட மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இதனால், அப்பகுதியில் வசிப்போர், இரவு நேரத்தில் மின்விசிறியை கூட பயன்படுத்த முடியாமல், துாக்கம் இன்றி சிரமம் அடைந்து வருகின்றனர்.

அதேபோல், மிக்சி, கிரைண்டர் உள்ளிட்ட வீட்டு உபகரணங்களை பயன்படுத்த முடியாமல், பெண்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.

இதுகுறித்து, அப்பகுதிவாசிகள் கூறியதாவது:

இப்பகுதியில், சில நாட்களாக குறைந்த அழுத்தம் கொண்ட மின்சாரம் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, துாக்கம் இன்றி தவிக்கின்றனர்.

சமையல் சாதனங்களை பயன்படுத்த முடியாமல் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே, எங்கள் பகுதிக்கு சீரான மின் வினியோகம் கிடைக்க, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us