sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

மாடம்பாக்கம், கோவிலாஞ்சேரி, அகரம்தென் கிராமங்களில்...கட்டடங்களுக்கு தடை!: 600 ஏக்கரில் நில தொகுப்பு திட்டம் செயல்படுத்த நடவடிக்கை

/

மாடம்பாக்கம், கோவிலாஞ்சேரி, அகரம்தென் கிராமங்களில்...கட்டடங்களுக்கு தடை!: 600 ஏக்கரில் நில தொகுப்பு திட்டம் செயல்படுத்த நடவடிக்கை

மாடம்பாக்கம், கோவிலாஞ்சேரி, அகரம்தென் கிராமங்களில்...கட்டடங்களுக்கு தடை!: 600 ஏக்கரில் நில தொகுப்பு திட்டம் செயல்படுத்த நடவடிக்கை

மாடம்பாக்கம், கோவிலாஞ்சேரி, அகரம்தென் கிராமங்களில்...கட்டடங்களுக்கு தடை!: 600 ஏக்கரில் நில தொகுப்பு திட்டம் செயல்படுத்த நடவடிக்கை


ADDED : மார் 08, 2024 12:30 PM

Google News

ADDED : மார் 08, 2024 12:30 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:தாம்பரம் அருகில் நகர்ப்புற நில தொகுப்பு திட்டம் செயல்படுத்தப்பட உள்ள மாடம்பாக்கம், கோவிலாஞ்சேரி, அகரம்தென் ஆகிய கிராமங்களில், புதிய கட்டட அனுமதிகள் வழங்க உள்ளாட்சி அமைப்புகளுக்கு சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ., தடை விதித்துள்ளது.

மத்திய அரசின் 'அம்ரூத்' திட்டத்தின் கீழ், சென்னையில் ஜார்ஜ் டவுன் பகுதி மறுமேம்பாடு செய்யப்பட உள்ளது. இதே போல, தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம், அகரம் தென், கோவிலாஞ்சேரி கிராமங்களில் நில மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இங்கு காலியாக உள்ள தனியார் நிலங்கள் மொத்தமாக தொகுக்கப்பட்டு, திட்டமிட்ட நகர்ப்புற பகுதியாக மேம்படுத்தப்படும். தரமான சாலை, பூங்காக்கள் என, அனைத்து வசதிகளும் அடங்கிய மனைப்பிரிவுகள் ஏற்படுத்தப்படும்.

பற்றாக்குறை


மத்திய அரசின் நிதி உதவியுடன் இதற்கான பூர்வாங்க ஆய்வு பணிகளை, 2021ல் சி.எம்.டி.ஏ., துவக்கியது. இது குறித்து நில உரிமையாளர்கள் கருத்துகள் பெறப்பட்டு, வரைவு திட்ட அறிக்கை இறுதி செய்யப்பட்டது.

சென்னை பெருநகரில், நகர்ப்புற வளர்ச்சி அபரிமிதமாக உள்ளது. இதனால், திட்டமிடல் இன்றி பல்வேறு இடங்களில் குடியிருப்பு பகுதிகள் உருவாகின்றன.

முறையான திட்டமிடல் இல்லாமல் உருவாகும் இத்தகைய பகுதிகளில், ஏராளமானோர் நிலம் வாங்கி, வீடு கட்டி குடியேறுகின்றனர். இவ்வாறு மக்கள் அதிக எண்ணிக்கையில் குடியேறிய பின், அடிப்படை வசதிகள் பற்றாக்குறை தொடர்பான பிரச்னைகள் எழுகின்றன.

போக்குவரத்து நெரிசல், இட நெருக்கடி போன்ற பிரச்னைகளுக்கு தீர்வாக அடுக்குமாடி கட்டடங்கள் கட்டுவது, சாலை விரிவாக்க திட்டங்கள் போன்றவற்றை செயல்படுத்த வேண்டியுள்ளது. மக்கள் மற்றும் குடியிருப்புகளின் நெருக்கம் அதிகரித்துவிட்ட நிலையில், சாலை விரிவாக்கம் உள்ளிட்ட பணிகளுக்கு நிலம் கையகப்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகின்றன.

இத்தகைய பிரச்னைகள் இல்லாமல், முன்மாதிரியாக ஒரு பகுதியை மேம்படுத்த சி.எம்.டி.ஏ., முடிவு செய்தது. இதற்காக, தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம், அகரம் தென், கோவிலாஞ்சேரி பகுதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இப்பகுதிக்கான நகர்ப்புற நில தொகுப்பு மேம்பாட்டு திட்டம் இறுதி வடிவம் பெற்றுள்ளது. கடந்த ஜனவரியில் இத்திட்டத்துக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இதன் அடிப்படையில் மாடம்பாக்கம், அகரம் தென், கோவிலாஞ்சேரி பகுதியில் நகர்ப்புற நில தொகுப்பு மேம்பாட்டு திட்ட பணிகளை சி.எம்.டி.ஏ., துவக்கி உள்ளது.

உத்தரவு


நகர்ப்புற நில தொகுப்பு திட்டம் தொடர்பாக சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா சார்பில், மாடம்பாக்கம் பேரூராட்சி செயல் அலுவலர், பரங்கிமலை ஊராட்சி ஒன்றிய கமிஷனர் ஆகியோருக்கு கடிதம் எழுதப்பட்டு உள்ளது.

அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

மாடம்பாக்கம் பேரூராட்சி, தற்போது தாம்பரம் மாநகராட்சியின் ஒரு பகுதியாக உள்ளது. இப்பகுதிகளில் நகர்ப்புற நில தொகுப்பு மேம்பாட்டு திட்டத்துக்கு, 600 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலங்கள் தொடர்பான சர்வே எண் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த சர்வே எண்களுக்கு உட்பட்ட நிலங்களில் மனை உட்பிரிவு செய்தல், புதிய கட்டட அனுமதி வழங்கல் தொடர்பான விண்ணப்பங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது.

இது போன்ற விண்ணப்பங்கள் வந்தால், அது குறித்த விபரங்களை சி.எம்.டி.ஏ.,வுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கட்டுமான துறையினர் அதிர்ச்சி


சி.எம்.டி.ஏ., குறிப்பிட்டுள்ள பகுதிகளில் ஏற்கனவே ஏராளமானோர் மனை வாங்கியுள்ள நிலையில், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கும் பல்வேறு நிறுவனங்கள் நிலம் வாங்கியுள்ளன. இந்நிலையில், சி.எம்.டி.ஏ.,வின் அறிவிப்பு குறித்து, கட்டுமானத் துறையினர் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.
இது குறித்து கட்டட அமைப்பியல் பொறியாளர் பி. பாலமுருகன் கூறியதாவது: திட்டமிட்ட முறையில் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தை செயல்படுத்துவதில் தவறில்லை. எவ்வித வளர்ச்சியும் இல்லாத பகுதியில் உள்ள நிலங்களை இதற்கு தேர்வு செய்து பயன்படுத்த வேண்டும். ஆனால், சென்னைக்கு மிக அருகில் பொது மக்கள் அதிக அளவில் மனை வாங்க முதலீடு செய்துள்ள இடத்தில், நிலங்களை மொத்தமாக கையகப்படுத்துவது நல்லதல்ல.
மேலும், மாடம்பாக்கம், அகரம் தென் பகுதிகளில் பல்வேறு கட்டுமான நிறுவனங்கள் புதிய திட்டங்களை அறிவித்து, அதில் பெருமளவு முதலீடு செய்துள்ள நிலையில், சி.எம்.டி.ஏ.,வின் முடிவால் பொருளாதார இழப்பு ஏற்படும். இது விஷயத்தில் அவசரம் காட்டாமல் நிதானமாக யோசித்து, எதார்த்த நிலையை புரிந்து சி.எம்.டி.ஏ., செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.



புதிய நகரத்தை நிர்மாணிக்க திட்டம்


மூன்று கிராமங்களில் நிலம் கையகப்படுத்தி, புதிய நகரத்தை உருவாக்கவும், மேம்படுத்தப்பட்ட மனைப்பிரிவுகள் நில உரிமையாளர்களுக்கு பகிர்ந்தளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.இது குறித்து சி.எம்.டி.ஏ., அதிகாரி ஒருவர் கூறியதாவது: மாடம்பாக்கம், அகரம் தென், கோவிலாஞ்சேரி பகுதிகளில் தேர்வு செய்யப்பட்ட சர்வே எண்களுக்கு உட்பட்ட நிலங்களின் உரிமையாளர்களிடம் பேச்சு நடத்தப்படும்.
இதில் நிலம் மொத்தமாக கையகப்படுத்தப்படாது. மாறாக, நில உரிமையாளரின் அனுமதி பெறப்பட்டு, அந்த நிலங்கள் ஒன்று சேர்க்கப்படும். இதன் அடிப்படையில், மொத்தமுள்ள, 600 ஏக்கர் நிலத்தை அடிப்படையாக வைத்து, புதிய நகரம் உருவாக்கப்படும்.
இங்கு நிலங்களின் வகைப்பாடு திருத்தி அமைக்கப்பட்டு குடியிருப்பு, வணிக பகுதி, பொது பயன்பாட்டு பகுதி, பள்ளிகள், நீர் நிலைகள், சாலைகள், பூங்காக்களுக்கு நிலம் ஒதுக்கப்படும். முறையாக திட்டமிடப்பட்ட மனைப்பிரிவாக இப்பகுதி மேம்படுத்தப்படும். இவ்வாறு மேம்படுத்தப்பட்ட மனைகள், நில உரிமையாளர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.








      Dinamalar
      Follow us