/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அங்காள பரமேஸ்வரி கோவில் மஹா கும்பாபிஷேகம் விமரிசை
/
அங்காள பரமேஸ்வரி கோவில் மஹா கும்பாபிஷேகம் விமரிசை
ADDED : ஆக 09, 2025 01:32 AM

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் அருகே பெரும்பேர் கண்டிகை கிராமத்தில், அங்காள பரமேஸ்வரி கோவிலில் , மஹா கும்பாபிஷேகம் நடந்தது.
பெரும்பேர்கண்டிகை அங்காள பரமேஸ்வரி கோவிலில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.
இதன்படி, ஆதிதிராவிடர் நலக்குழு மாவட்ட துணை அமைப்பாளர் சிவகுமார், ஒன்றிய குழு உறுப்பினர் பொன்மலர் சிவக்குமார் குடும்பத்தாரின் முழு செலவில், அர்த்த மண்டபம் உட்பட பணிகள் அனைத்தும் முடிவுற்று, மஹா கும்பாபிஷேகத்திற்கு, நேற்று முன்தினம் பந்தக்கால் நடப்பட்டது.
நேற்று காலை 6:00 மணிக்கு மங்கல இசை, நான்காம் கால யாகசாலை பூஜைகள், விசேஷ திரவிய ஹோமத்துடன் துவங்கி, காலை 8:00 மணிக்கு கலசம் புறப்பாடு நடந்தது.
காலை 8:30 மணி முதல் 8:45 மணியளவில், யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரால், விமான கோபுர கலசத்திற்கு, மஹா கும்பாபிஷேகம் நடந்தது.
காலை 9:00 மணிக்கு விசேஷ அலங்காரம், மஹா தீபாராதனை முடிந்து, அன்னதானம் வழங்கப்பட்டது.
கோவில் கும்பாபிஷேக விழாவில், சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
இரவு, 7:00 மணிக்கு, மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில், அங்காள பரமேஸ்வரி திருவீதி உலா வருதல் நிகழ்ச்சி நடந்தது.