/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அரசு மருத்துவமனையில் ஆண் சடலம் மீட்பு
/
அரசு மருத்துவமனையில் ஆண் சடலம் மீட்பு
ADDED : பிப் 18, 2025 05:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்கல்பட்டு: செங்கல் பட்டு அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள காத்திருப்போர் அறையில், நேற்று முன்தினம் இரவு, 30 வயது மதிக்கத்தக்க நபர் இறந்து கிடந்துள்ளார்.
இதைக் கண்ட மருத்துவமனை ஊழியர்கள், செங்கல்பட்டு நகர போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அந்த உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்து, இறந்த நபர் யார்? உடல்நிலை சரியில்லாமல் இறந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என, பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

