/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்குன்றம் ஏரியில் ஆண் சடலம் மீட்பு
/
செங்குன்றம் ஏரியில் ஆண் சடலம் மீட்பு
ADDED : அக் 10, 2025 10:46 PM
சிங்கபெருமாள் கோவில்:சிங்கபெருமாள் கோவில் அருகே, செங்குன்றம் ஏரியில் கிடந்த ஆண் சடலத்தை மீட்டு, போலீசார் விசாரிக்கின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம், சிங்கபெருமாள் கோவில் அடுத்த செங்குன்றம் ஏரி நீரில் ஆண் சடலம் மிதப்பதாக, மறைமலை நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், 44 வயது மதிக்கத்தக்க ஆண் சடலத்தை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து வழக்கு பதிந்து விசாரித்ததில், இறந்த நபர் சிங்கபெருமாள் கோவில் அடுத்த ஜெ.ஜெ.நகரைச் சேர்ந்த கன்னியப்பன், 44, என தெரிந்தது.
மேலும், ஏரியில் குளிக்க சென்ற போது, தண்ணீரில் மூழ்கி இறந்ததும் தெரிய வந்தது. இது குறித்து, போலீசார் மேலும் விசாரிக்கின்றனர்.