/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பூட்டிய வீட்டில் ஆண் சடலம் மீட்பு
/
பூட்டிய வீட்டில் ஆண் சடலம் மீட்பு
ADDED : ஏப் 10, 2025 08:11 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு அடுத்த அனுமந்தபுத்தேரி பகுதியைச் சேர்ந்தவர் சுதேஷ், 42. தனியார் நிறுவனத்தில் உதவி மேலாளராக வேலை பார்த்து வந்தார்.
இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக தம்பதி, கடந்த ஓராண்டாக பிரிந்து, சுதேஷ் தனியாக வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் இரவு சுதேஷ் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக, அக்கம் பக்கத்தினர் செங்கல்பட்டு நகர போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, இறந்து அழுகிய நிலையில் சுதேஷ் கிடந்துள்ளார்.
உடலை மீட்ட போலீசார், செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து வழக்கு பதிந்து, சுதேஷ் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு காரணமா என்ற கோணங்களில் போலீசார் விசாரிக்கின்றனர்.