sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

மறைமலைநகரில் ஆண் சடலம் மீட்பு

/

மறைமலைநகரில் ஆண் சடலம் மீட்பு

மறைமலைநகரில் ஆண் சடலம் மீட்பு

மறைமலைநகரில் ஆண் சடலம் மீட்பு


ADDED : மார் 23, 2025 10:49 PM

Google News

ADDED : மார் 23, 2025 10:49 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலைநகர்:மறைமலைநகர் நகராட்சி என்.ஹெச்-2 பாவேந்தர் சாலையில் உள்ள அய்யப்பன் கோவில் அருகில் நேற்று காலை, இறந்த நிலையில் 30 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக, மறைமலைநகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் உடலை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து, போலீசார் விசாரித்தனர். இதில், இறந்த நபர் கடந்த சில நாட்களாக, மறைமலைநகர் பகுதியில் மது போதையில் தெருக்களில் சுற்றி வந்தது தெரிந்தது.

இறந்த நபர் மது போதையில் உயிரிழந்தாரா அல்லது வேறு காரணமா என்ற கோணங்களில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us