sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

முதியவரை கல்லால் தாக்கியவர் கைது

/

முதியவரை கல்லால் தாக்கியவர் கைது

முதியவரை கல்லால் தாக்கியவர் கைது

முதியவரை கல்லால் தாக்கியவர் கைது


ADDED : ஜூலை 07, 2025 03:52 AM

Google News

ADDED : ஜூலை 07, 2025 03:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாம்பரம்:மேற்கு தாம்பரம் அடுத்த திருநீர்மலை, ராஜகோபால் நகரை சேர்ந்தவர் விக்னேஷ், 33. இவரிடம், அதே பகுதியை சேர்ந்த கிஷோர், 33, என்பவர்,கடந்த 4 ஆண்டுகளுக்கு முன், அவசரபண தேவைக்கு, 6 சவரன் நகையை பெற்றுள்ளார்.

அதன்பின், பலமுறை நகையை திருப்பி தறுமாறு விக்னேஷ் கேட்டும், கிஷோர் நகையை தராமல் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன், கிஷோருக்கு தொடர்பு கொண்ட விக்னேஷ், நகை குறித்து கேட்டுள்ளார். அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து, கிஷோர் அவரது மனைவியுடன் விக்னேஷ் வீட்டிற்கு சென்று, தகராறில் ஈடுபட்டார். அப்போது, தடுக்க வந்த விக்னேஷின் தந்தை குமார், 55, தலையில், கல்லால் கிஷோர் தாக்கியுள்ளார்.

இதில் பலத்த காயம் அடைந்த குமார், குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்த புகாரின்படி, தாம்பரம் போலீசார், கிஷோரை கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us