/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மறைமலைநகரில் டீ கடைக்காரரை தாக்கியவர் கைது
/
மறைமலைநகரில் டீ கடைக்காரரை தாக்கியவர் கைது
ADDED : டிச 07, 2024 12:48 AM
மறைமலைநகர், மறைமலை நகர் அடுத்த சட்டமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திகேயன், 42. மறைமலைநகர் சிப்காட் சந்தாராணிகுளம் அருகில் டீ கடை நடத்தி வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு டீ கடைக்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல், கார்த்திகேயன் மற்றும் அவரது மனைவி ஜெய்சாந்தி, 34, ஆகியோரை கிண்டல் செய்து, தாக்கி விட்டு தப்பியுள்ளனர்.
அங்கிருந்தோர் இருவரையும் மீட்டு, பொத்தேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்த புகாரின்படி, மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
சம்பவத்தில் ஈடுபட்ட மெல்ரோசாபுரம் பகுதியைச் சேர்ந்த பழைய குற்றவாளியான மணிகண்டன்,29, என்ற சுள்ளான் மணி என்பவரை கைது செய்தனர். இவர் மீது, பல்வேறு வழக்குகள் உள்ளன.
தப்பிச் சென்ற இவரது நண்பர்களை போலீசார் தேடி வருகின்றனர்.