/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கஞ்சா விற்ற நபர் அஞ்சூரில் கைது
/
கஞ்சா விற்ற நபர் அஞ்சூரில் கைது
ADDED : ஜன 08, 2025 07:46 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மறைமலை நகர்:செங்கல்பட்டு அடுத்த அஞ்சூர் கிராமத்தில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பு அருகில், கஞ்சா விற்பனை நடைபெறுவதாக, செங்கல்பட்டு தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மித்தேஷ் குமார் பாண்டே,31, என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 14 கிராம் கஞ்சா மற்றும் 14,807 ரூபாயை பறிமுதல் செய்தனர்.