/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பூச்சி மருந்து குடித்தவர் சிகிச்சை பலனின்றி பலி
/
பூச்சி மருந்து குடித்தவர் சிகிச்சை பலனின்றி பலி
ADDED : ஜன 01, 2025 08:06 PM
மறைமலைநகர்:மறைமலைநகர் அடுத்த கடம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நாராயணன்,46.
இவர், மறைமலைநகரில் உள்ள கேட்டீன் ஒன்றில் டிரைவராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி செல்வி,45.
நாராயணனுக்கு மது பழக்கம் இருந்து வந்ததால், தம்பதிக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.
இதேபோல், நேற்று முன்தினம் இரவும் சண்டை ஏற்படவே, நாராயணன் பூச்சி மருந்தை குடித்து உள்ளார்.
உடனே, அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று காலை நாராயணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து, மறைமலைநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.