/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
புகார் மீது நடவடிக்கை இல்லாததால் கலெக்டர் ஆபீசில் தீக்குளித்த நபர்
/
புகார் மீது நடவடிக்கை இல்லாததால் கலெக்டர் ஆபீசில் தீக்குளித்த நபர்
புகார் மீது நடவடிக்கை இல்லாததால் கலெக்டர் ஆபீசில் தீக்குளித்த நபர்
புகார் மீது நடவடிக்கை இல்லாததால் கலெக்டர் ஆபீசில் தீக்குளித்த நபர்
ADDED : ஜன 04, 2025 12:55 AM

செங்கல்பட்டு,:செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் அடுத்த திரிசூலம் பகுதியைச் சேர்ந்தவர் பாபு,44. தொழுநோயாளியான இவருக்கும், பக்கத்து வீட்டில் வசிப்போருக்கும், 8 ஆண்டுகளாக அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.
கடந்த நவ., 30 தேதி ஏற்பட்ட சண்டையில், பாபு மற்றும் அவரது குடும்பத்தினரை, எதிர் தரப்பு தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து பாபு, பல்லாவரம் போலீசில் புகார் அளித்த நிலையில், நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
விரக்தியடைந்த பாபு, நேற்று காலை செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக வளாகத்திற்கு வந்து, தன் உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
அங்கிருந்த ஊழியர்கள் அவரை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் அவருக்கு, 70 சதவீத தீக்காயம் ஏற்பட்டு இருந்தது.
தகவலறிந்து வந்த கலெக்டர் அருண்ராஜ், மருத்துவர்களிடம் பாபுவுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.
தொடர்ந்து பாபு, மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். இதுகுறித்து, செங்கல்பட்டு தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
இதுகுறித்து, கலெக்டர் அருண்ராஜ் கூறியதாவது:
தாம்பரம் போலீஸ் கமிஷனரகத்தில் அளித்த தன் மனு மீது நடவடிக்கை எடுக்கவில்லை என, பாபு தீக்குளிக்க முயன்றார். அவரை உடனே மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தோம்.
தற்போது, நான்கு பேர் கொண்ட மருத்துவ குழு, போலீஸ் பாதுகாப்புடன் அவுரை கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி உள்ளோம். வருவாய்த் துறை அதிகாரிகள் பாபு வீட்டை பார்வையிட்டு உள்ளனர்.
பக்கத்து வீட்டில் வசிப்போருடன், மழைக்காலங்களில் ஏற்பட்ட வாக்குவாதம் தொடர்பாக, 10 ஆண்டுகளாக பிரச்னை உள்ளதாக, பாபுவின் பெற்றோர் கூறினர்.
இவ்வாறு அவர் கூறினார்.

