sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

சிறுவர்களை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு 'இரட்டை ஆயுள்'

/

சிறுவர்களை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு 'இரட்டை ஆயுள்'

சிறுவர்களை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு 'இரட்டை ஆயுள்'

சிறுவர்களை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு 'இரட்டை ஆயுள்'


ADDED : ஆக 19, 2025 12:19 AM

Google News

ADDED : ஆக 19, 2025 12:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு, சிறுவர்களை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு, இரட்டை ஆயுள் சிறை தண்டனை விதித்து, செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம், நேற்று தீர்ப்பளித்தது.

சென்னை, கண்ணகி நகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த இரு சிறுவர்கள், தந்தையை பிரிந்து தாயுடன் வசித்து வருகின்றனர்.

கடந்த 2016 செப்., 10ம் தேதி, ஒரு சிறுவனுக்கு 8 வயது, மற்றொரு சிறுவனுக்கு 5 வயதாக இருக்கும் போது, அதே பகுதியைச் சேர்ந்த கோபிநாத், 41, என்பவர் தன் வீட்டிற்கு கடத்திச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதுகுறித்து சிறுவர்கள், தன் தாயிடம் கூற, அவர் சென்னை, கண்ணகிநகர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, கோபிநாத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இவ்வழக்கு விசாரணை, செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில், நீதிபதி நசீமா பானு முன்னிலையில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் லட்சுமி ஆஜரானார்.

குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், கோபிநாத்துக்கு இரட்டை ஆயுள் சிறை தண்டனையும், 4,000 ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி நசீமா பானு, நேற்று தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு இழப்பீடாக, தலா 5 லட்சம் ரூபாய் வழங்க, தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us