sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

மணிலா பயிரிடும் பணி விவசாயிகள் ஆயத்தம்

/

மணிலா பயிரிடும் பணி விவசாயிகள் ஆயத்தம்

மணிலா பயிரிடும் பணி விவசாயிகள் ஆயத்தம்

மணிலா பயிரிடும் பணி விவசாயிகள் ஆயத்தம்


ADDED : ஜன 02, 2024 09:25 PM

Google News

ADDED : ஜன 02, 2024 09:25 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செய்யூர்:செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டத்திற்குட்பட்ட லத்துார் மற்றும் சித்தாமூர் ஒன்றியத்தில் 84 ஊராட்சிகள் உள்ளன. 30,000 ஏக்கர் விவசாய நிலத்தைக் கொண்டுள்ளது. விவசாயமே இப்பகுதி மக்களின் பிரதான தொழிலாகும்.

ஏரி, ஆறு, குளம், கிணறு, ஆழ்துளை கிணறு போன்ற நீராதாரங்கள் வாயிலாக நெல், மணிலா, கரும்பு, எள், உளுந்து, தர்ப்பூசணி ஆகியவை பருவத்திற்கு ஏற்றாற்போல் பயிரிடப்படுகிறது.

இப்பகுதியில், சம்பா பருவத்தில் பெரும்பாலும் நெற்பயிர் விவசாயம் செய்யப்படுகிறது. அடுத்த படியாக மணிலா விவசாயம் செய்யப்படும்.

ஆண்டுதோறும் செய்யூர் வட்டத்திற்கு உட்பட்ட பகுதியில், 7,000 ஏக்கர் பரப்பளவில் மணிலா பயிரிடப்படுவது வழக்கம்.

இந்த ஆண்டும், மணிலா பயிரிடும் பணியில் விவசாயிகள் ஆயத்தமாகி வருகின்றனர். நீர்ப்பாசன கால்வாய் சீரமைத்தல், ஏர் ஓட்டுதல், பயிர் விதைத்தல் போன்ற பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

மணிலா பயிரிடும் விவசாயிகள், 50 சதவீத மானிய விலையில் ஜிப்சம் உரம் பெற்றுக் கொள்ளலாம் என, சித்தாமூர் மற்றும் பவுஞ்சூர் வேளாண் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us