sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

பழைய மேல்நிலை தொட்டியால் பெருக்கரணை மக்கள் அவஸ்தை

/

பழைய மேல்நிலை தொட்டியால் பெருக்கரணை மக்கள் அவஸ்தை

பழைய மேல்நிலை தொட்டியால் பெருக்கரணை மக்கள் அவஸ்தை

பழைய மேல்நிலை தொட்டியால் பெருக்கரணை மக்கள் அவஸ்தை


ADDED : செப் 30, 2024 04:25 AM

Google News

ADDED : செப் 30, 2024 04:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சித்தாமூர் : சித்தாமூர் அருகே பெருக்கரணை ஊராட்சிக்கு உட்பட்ட பெருக்கரணை காலனி பகுதியில் குளக்கரை அருகே, 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட, 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தேக்கத்தொட்டி உள்ளது.

இது கிராமத்தின் பிரதான குடிநீர் ஆதாரமாக உள்ளது. கிராமத்தில் உள்ள குடிநீர் கிணற்றில் இருந்து, மின் மோட்டார் வாயிலாக மேல்நிலை தேக்கத் தொட்டிகளுக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு, குழாய்கள் வாயிலாக கிராம மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. பராமரிப்பு இல்லாமல் நாளடைவில், மேல்நிலைக் குடிநீர் தேக்கத்தொட்டியில் சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து, இரும்புத் துகள் கலந்த தண்ணீர் வினியோகம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

மேலும், பலவீனமாக உள்ள மேல்நிலைக் குடிநீர் தேக்கத்தொட்டி முழுதும் இடிந்து குடிநீர் வினியோகம் பாதிக்கப்படுவதற்கு முன், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, பழைய மேல்நிலைத்தொட்டியை அகற்றி, புதிய தேக்கத்தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us