sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

மேடவாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதிய பணியாளரின்றி நோயாளிகள் சிரமம்

/

மேடவாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதிய பணியாளரின்றி நோயாளிகள் சிரமம்

மேடவாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதிய பணியாளரின்றி நோயாளிகள் சிரமம்

மேடவாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதிய பணியாளரின்றி நோயாளிகள் சிரமம்


ADDED : நவ 11, 2024 02:03 AM

Google News

ADDED : நவ 11, 2024 02:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேடவாக்கம்:பள்ளிக்கரணை அடுத்த மேடவாக்கத்தில், அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. தினமும் 300 முதல் 500 நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். உள்நோயாளிகளுக்கு 30 படுக்கை வசதிகள் உள்ளன.

தவிர, மகப்பேறு, குழந்தை நலன் உள்ளிட்ட சிறப்பு சிகிச்சையும், சித்த மருத்துவத்திற்கு தனி பிரிவும் இங்கு உள்ளது. மேலும், இரண்டு ஆம்புலன்ஸ்கள் உள்ளன.

கொரோனா தொற்றுக்கு முன் இம்மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள், உதவியாளர்கள் என 100 பேர் பணியாற்றினர்.

மூன்று ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்பட்டு, தற்போது 34 நிரந்தர பணியாளர்கள், 16 தற்காலிக பணியாளர்கள் உள்ளனர்.

இவர்களில், 'ஷிப்ட்' முறை பணிக்காக 15 பேர் ஒதுக்கப்பட்டுள்ளதால், மீதமுள்ள 35 பணியாளர்களை வைத்தே, மருத்துவமனை இயங்கி வருகிறது.

இதனால், நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருப்பதும், அவசர சிகிச்சையை உடனே மேற்கொள்வதில் தாமதமும் ஏற்படுவதாக பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:

கொரோனாவிற்கு முன், இந்த மருத்துவமனையில் 'சிசேரியன்' மற்றும் சுகப்பிரசவம் என, தினமும் 80 பிரசவங்கள் பார்க்கப்பட்டன. தவிர, காய்ச்சல், சளி உள்ளிட்ட நோய்களுக்கு, 500 பேர் வெளிநோயாளியாக வந்து சிகிச்சை பெற்று செல்வர்.

கொரோனாவிற்கு பின், இம்மருத்துவமனையில் பணியாற்றி வந்த மருத்துவர்கள், செவிலியர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுனர், உதவியாளர்கள் என, 50க்கும் மேற்பட்டோர், அரசு மருத்துவமனைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.

தற்போது, இம்மருத்துவமனையில் இரண்டு ஆம்புலன்ஸ்கள் உள்ளன. ஆனால், ஓட்டுனர்கள் இல்லை. அவசரம் என்றால், தற்காலிகமாக ஓட்டுனரை நியமித்து, ஆம்புலன்ஸ் இயக்கப்படுகிறது.

தவிர, நோயாளிகள் வருகை, மருத்துவப் பதிவேடு குறித்த தகவல்களை கணினியில் பதிவு செய்வதற்கு ஆள் இல்லை. இந்த பணிகளை செவிலியர்களே செய்யும் நிலை உள்ளது.

மருத்துவர்கள், செவிலியர்கள், உதவியாளர்கள் போதிய எண்ணிக்கையில் இல்லாததால், நோயாளிகள் குறித்த நேரத்தில் சிகிச்சை பெறுவதில் தாமதம் ஏற்படுகிறது.

மேலும், இரவு நேரத்தில், ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஓர் உதவியாளர் என மூன்று பேர் மட்டுமே பணியில் உள்ளனர்.

ஐந்து ஏக்கர் பரப்பில் உள்ள இந்த சுகாதார மையத்திற்கு, இரண்டு துப்புரவு தொழிலாளிகள் மட்டுமே உள்ளனர். போதிய டாக்டர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பினால், நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

செவிலியர்கள் கூறுகையில், 'மருத்துவர்களையும், செவிலியர்களையும், போதுமான உதவியாளர்களையும் அரசு நியமித்தால், ஆரம்ப சுகாதார மையங்கள் தனிச் சிறப்புடன் சேவையாற்றும்' என்றனர்.






      Dinamalar
      Follow us