ADDED : ஜன 30, 2025 10:27 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்போரூர்:திருப்போரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளி குழந்தைகள் மற்றும் மாணவர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம், நேற்று நடந்தது.
முகாமில், மூளை வளர்ச்சி குறைபாடு, கண், காது, கை, கால் உள்ளிட்ட பாதிப்புகள் உள்ள குழந்தைகள், மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. புதிதாக அடையாள அட்டைகள், இலவச உபகரணங்கள் வழங்குதல் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர், சரவணன், வட்டார வளமைய மேற்பார்வையாளர் திருவருள்செல்வி, வட்டார ஒருங்கிணைப்பாளர் மஞ்சு உள்ளிட்டடோர் பங்கேற்றனர்.