sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

அடிப்படை வசதிகள் இல்லை மேலமையூர்வாசிகள் தவிப்பு

/

அடிப்படை வசதிகள் இல்லை மேலமையூர்வாசிகள் தவிப்பு

அடிப்படை வசதிகள் இல்லை மேலமையூர்வாசிகள் தவிப்பு

அடிப்படை வசதிகள் இல்லை மேலமையூர்வாசிகள் தவிப்பு


ADDED : டிச 05, 2024 11:03 PM

Google News

ADDED : டிச 05, 2024 11:03 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலை நகர்,காட்டாங்கொளத்துார் ஒன்றியம், மேலமையூர் முதல்நிலை ஊராட்சியில் ராம கிருஷ்ணா நகர், ஆண்டாள் நகர், நியூ காலனி, பவானி நகர், கந்தவேல்நகர் உள்ளிட்ட ஒன்பது வார்டுகள் உள்ளன.

இதில் 11,000க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். வெளிமாவட்டங்களைச் சேர்ந்தோர் இங்கு தங்கி, மகேந்திரா சிட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த கிராமம் செங்கல்பட்டு நகரத்தை ஒட்டி உள்ளதால், நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து வருகிறது. இருப்பினும் சாலை வசதி, மழைநீர் வடிகால் வசதி, கழிவு நீர் கால்வாய், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக இல்லாததால், நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து கிராம மக்கள் கூறியதாவது:

கிராமத்தில் உள்ள தெருக்கள் மற்றும் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளதால், கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.

மேலும் செங்கல்பட்டு பகுதியில் பன்றி வளர்ப்போர், தங்களது பன்றிகளை இந்த கிராமத்தில் கொண்டு வந்து விட்டுச் செல்வதால், இவை கிராமத்தைச் சுற்றி உள்ள குப்பையை கிளறி வருகின்றன.

எனவே, இந்த பகுதியிலுள்ள குப்பைகளை அகற்றி, கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us