sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

இருசக்கர வாகனம் நிறுத்துமிடமாக மாறிய மேல்மருவத்துார் பேருந்து நிறுத்தம்

/

இருசக்கர வாகனம் நிறுத்துமிடமாக மாறிய மேல்மருவத்துார் பேருந்து நிறுத்தம்

இருசக்கர வாகனம் நிறுத்துமிடமாக மாறிய மேல்மருவத்துார் பேருந்து நிறுத்தம்

இருசக்கர வாகனம் நிறுத்துமிடமாக மாறிய மேல்மருவத்துார் பேருந்து நிறுத்தம்


ADDED : மே 12, 2025 01:08 AM

Google News

ADDED : மே 12, 2025 01:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேல்மருவத்துார்:மேல்மருவத்துார் பயணியர் நிழற்குடை பகுதியில், இருசக்கர வாகனங்களை, வாகன ஓட்டிகள் சாலையிலேயே நிறுத்தி விட்டு செல்வதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

மேல்மருவத்துார் சுற்றுவட்டாரத்தில் உள்ள 30-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த, வெளியூர் பகுதிக்கு வேலைக்கு செல்வோர், கல்லுாரி படிக்கச் செல்லும் மாணவர்கள், மேல்மருவத்துார் பேருந்து நிறுத்தத்தில் இருந்து செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை போன்ற நகரங்களுக்கு சென்று வருகின்றனர்.

மேல்மருவத்துார் பேருந்து நிறுத்தம், எப்போதும் மக்கள் கூட்டத்துடன் பரபரப்பாக காணப்படும்.

தென் மாவட்டங்களில் இருந்து வரும் பேருந்துகள், விழுப்புரம், திருவண்ணாமலை, சேலம் பகுதியில் இருந்து வரும் விரைவு, அதிவிரைவு மற்றும் சொகுசு பேருந்துகள், மேல்மருவத்துார் நிறுத்தத்தில் நின்று செல்கின்றன.

இதன் காரணமாக, பேருந்து பயணம் மேற்கொள்ளும் பயணியர், மேல்மருவத்துாரில் இருந்து பயணம் செய்வதை அதிகம் விரும்புகின்றனர்.

தற்போது, பேருந்தில் செல்வதற்காக, இரு சக்கர வாகனத்தில் வரும் பயணியர், இருசக்கர வாகனங்களை சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், சென்னை மார்க்கத்தில், பேருந்து பயணியர் நிழற்குடை உள்ள பகுதியிலேயே நிறுத்தி செல்கின்றனர்.

இதனால், கூட்ட நெரிசல் மிகுந்து காணப்படும் காலை மற்றும் மாலை நேரங்களில், பேருந்து பயணியர் மிகவும் சிரமப்படுகின்றனர்.

எனவே, தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், சாலை ஓரம் இருசக்கர வாகனங்களை நிறுத்தி விட்டுச் செல்லும் வாகனங்களை அப்புறப்படுத்த வேண்டும் என, பேருந்து பயணியர் கோரிக்கை விடுக்கின்றனர்.






      Dinamalar
      Follow us