/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
உதவி கமிஷனரிடம் வணிகர் சங்க பேரவையினர் மனு
/
உதவி கமிஷனரிடம் வணிகர் சங்க பேரவையினர் மனு
ADDED : ஜன 03, 2025 08:04 PM
கூடுவாஞ்சேரி:தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை, செங்கல்பட்டு வடக்கு மாவட்ட நிர்வாகிகள், பேரவை மாநில தலைவர் டைமன் ராஜாவுடன் சென்று, கூடுவாஞ்சேரியில் உள்ள உதவி கமிஷனர் அலுவலகத்தில், நேற்று காலை புகார் மனு ஒன்றை அளித்து உள்ளனர்.
அதில், மாநில தலைவர் டைமன் ராஜாவின் தலைமையை ஏற்க விரும்பாத சிலர், பேரவையை சீர்குலைக்கும் நோக்கில் தவறான தகவல்களை சமூக வலைதளத்தில் பரப்பி வருகின்றனர்.
வியாபாரிகளிடம் தவறான தகவல் பரப்பி வரும் பம்மல் பகுதியைச் சேர்ந்த ராஜ், அஸ்தினாபுரம் வெங்கடேசன் மற்றும் பிரபாகரன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறியுள்ளனர். புகாரை பெற்ற உதவி கமிஷனர், உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதால், அவர்கள் கலைந்து சென்றனர்.