sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 15, 2025 ,ஐப்பசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

கத்தியை காட்டி மிரட்டி துணி கடையில் பணம் பறிப்பு

/

கத்தியை காட்டி மிரட்டி துணி கடையில் பணம் பறிப்பு

கத்தியை காட்டி மிரட்டி துணி கடையில் பணம் பறிப்பு

கத்தியை காட்டி மிரட்டி துணி கடையில் பணம் பறிப்பு


ADDED : நவ 11, 2025 10:11 PM

Google News

ADDED : நவ 11, 2025 10:11 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்போரூர்: கேளம்பாக்கம் அடுத்த தாழம்பூர் ஊராட்சி, காரணை பேருந்து நிறுத்தம் அருகே, துணிக்கடை உள்ளது.

நேற்று முன்தினம் இரவு 7:00 மணியளவில் இரண்டு பைக்கில், மர்ம நபர்கள் மூன்று பேர் துணிக்கடைக்கு வந்துள்ளனர். துணி வாங்குவது போல் பேச்சு கொடுத்து நோட்டமிட்டுள்ளனர்.

அப்போது கடையில், உரிமையாளர் சுரேந்தர், 22, என்பவர் மட்டும் இருந்துள்ளார்.

அவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டிய மர்ம கும்பல், கல்லா பெட்டியில் இருந்த 15,000 ரூபாய், கடையில் இருந்த துணிகளை திருடிக் கொண்டு தப்பிச் சென்றுள்ளது.

இதுகுறித்து சுரேந்தர், தாம்பரம் மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.

இதன்படி, தாழம்பூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us