sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 18, 2025 ,கார்த்திகை 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

 செங்கை - திருப்போரூர் சாலையில் விபத்தில் சிக்கும் குரங்குகள்

/

 செங்கை - திருப்போரூர் சாலையில் விபத்தில் சிக்கும் குரங்குகள்

 செங்கை - திருப்போரூர் சாலையில் விபத்தில் சிக்கும் குரங்குகள்

 செங்கை - திருப்போரூர் சாலையில் விபத்தில் சிக்கும் குரங்குகள்


ADDED : நவ 18, 2025 03:46 AM

Google News

ADDED : நவ 18, 2025 03:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலை நகர்: செங்கல்பட்டு -- திருப்போரூர் சாலையில், குரங்குகள் விபத்தில் சிக்குவதை தடுக்க, வாகன ஓட்டிகளுக்கு தெரியும் வகையில் சாலையின் இருபுறமும் அறிவிப்பு பலகை அமைக்க வேண்டுமென, விலங்கு ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

செங்கல்பட்டு -- திருப்போரூர் சாலை, 25 கி.மீ., துாரம் உடையது. சென்னேரி, கொட்டமேடு, பெருந்தண்டலம் உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள், இந்த சாலையை பயன்படுத்தி செங்கல்பட்டு, திருப்போரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குச் சென்று வருகின்றனர்.

இந்த சாலையில், திருப்போரூர் கூட்டுச்சாலை அருகே, சாலையின் இருபுறமும் 1.5 கி.மீ., துாரம் காப்புக்காடு உள்ளது.

இதில், சாலையோரம் உள்ள மரங்களில் தஞ்சமடைந்துள்ள, 50க்கும் மேற்பட்ட குரங்குகள், சாலையின் குறுக்கே இருபுறமும் சென்று வருவதால், விபத்தில் சிக்கி வருகின்றன.

புதிதாக இந்த சாலையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகளுக்கு, இந்த பகுதியில் குரங்குகள் இருப்பது தெரியாது. அதனால், விபத்தில் சிக்கி அடிக்கடி குரங்குகள் இறக்கின்றன.

வாகன ஓட்டிகள் சிலர் குரங்குகளுக்கு உணவு பொருட்கள் தருவதால், அவை வாகனங்களின் பின்னே தொடர்ந்து செல்கின்றன. இதனால், பின்னால் வரும் வாகனங்கள் மோதி அடிபடுகின்றன.

எனவே, குரங்குகள் விபத்தில் சிக்குவதை தடுக்க, வாகன ஓட்டிகளுக்கு தெரியும் வகையில் சாலையின் இருபுறமும் அறிவிப்பு பலகை அமைக்க, வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விலங்கு ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us