sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

மானாம்பதி அரசு மருத்துவமனையில் பிரசவத்தில் தாய்- -- சேய் உயிரிழப்பு

/

மானாம்பதி அரசு மருத்துவமனையில் பிரசவத்தில் தாய்- -- சேய் உயிரிழப்பு

மானாம்பதி அரசு மருத்துவமனையில் பிரசவத்தில் தாய்- -- சேய் உயிரிழப்பு

மானாம்பதி அரசு மருத்துவமனையில் பிரசவத்தில் தாய்- -- சேய் உயிரிழப்பு


ADDED : ஜன 03, 2024 11:59 PM

Google News

ADDED : ஜன 03, 2024 11:59 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர்:காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றியம், பெருநகர் பகுதியைச் சேர்ந்தவர் ரகோத்தம்மன், 35. விவசாயி.

இவரது மனைவி, நிறைமாத கர்ப்பிணியான சத்யாவிற்கு, 31, நேற்று முன்தினம் இரவு பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து, மானாம்பதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனர்.

மானாம்பதி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் லத்திகா மற்றும் செவிலியர்கள் இருவர் இணைந்து, பிரசவம் பார்த்தனர். நள்ளிரவு 12:00 மணிக்கு, சத்யாவிற்கு இறந்த நிலையில் ஆண் குழந்தை பிறந்ததாக கூறப்படுகிறது.

மேலும், சத்யாவிற்கு தொடர்ந்து ரத்தப்போக்கு இருந்ததால், மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி அனுப்பினர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே சத்யா இறந்ததாக தெரிவித்தனர்.

தாய், சேய் இறந்ததை அறிந்த அவரது உறவினர்கள், மானாம்பதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்ட டி.எஸ்.பி., ஜூலியட் சீசர் தலைமையிலான போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து உறவினர்களிடத்தில் சமாதான பேச்சு நடத்தியதையடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர்.

உத்திரமேரூர் வட்டார சுகாதார மருத்துவ அலுவலர் உமாதேவி கூறியதாவது:

பிரசவத்திற்கு சரியான நேரத்தில் மருத்துவமனையில் சத்யா அனுமதிக்கப்பட்டார். மருத்துவர் மற்றும் செவிலியர்களும் முறையான சிகிச்சை தான் அளித்தனர்.

ஆனாலும், துரதிர்ஷ்டவசமாக தாய், சேய் இறந்தது வருத்தம் அளிக்கிறது. இறப்புக்கான மருத்துவ ரீதியான காரணங்கள் குறித்து கண்டறிந்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us