sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 26, 2025 ,கார்த்திகை 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

 கொண்டங்கி சாலையில் மின்விளக்குகள் அமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை

/

 கொண்டங்கி சாலையில் மின்விளக்குகள் அமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை

 கொண்டங்கி சாலையில் மின்விளக்குகள் அமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை

 கொண்டங்கி சாலையில் மின்விளக்குகள் அமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை


ADDED : நவ 26, 2025 04:49 AM

Google News

ADDED : நவ 26, 2025 04:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலை நகர், நவ. 26--

சிங்கபெருமாள் கோவில் -- கொண்டங்கி சாலையில் மின்விளக்குகள் அமைக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிங்கபெருமாள் கோவில் -- கொண்டங்கி சாலை, 10 கி.மீ., துாரம் உடையது. இந்த சாலையை மருதேரி, கருநிலம், கோவிந்தபுரம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மறைமலை நகர், சிங்கபெருமாள் கோவில், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்ல பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த சாலை நெல்லிக்குப்பம் -- திருப்போரூர் சாலையின் இணைப்பு சாலையாக உள்ளது.

இந்த சாலையில் கருநிலம் கிராம எல்லை முடிவில் இருந்து கொண்டங்கி வரை மின் விளக்குகள் இல்லாததால், வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர்.

இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:

இந்த சாலையை அதிக அளவில், இருசக்கர வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வருகின்றனர். இரவு நேரத்தில் விளக்குகள் இல்லாததால் சென்று வர சிரமமாக உள்ளது.

மேலும், ஊரைக் கடந்த பின் சாலையின் இருபுறமும் விவசாய நிலங்கள் மற்றும் ஏரி உள்ளது. சில நேரங்களில் தனியே வருவோரை மர்ம நபர்கள் தாக்கி, மொபைல்போனை பறித்துச் செல்கின்றனர். எனவே, இந்த பகுதியில் மின் விளக்குகள் அமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us