/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கரசங்கால் ரயில்வே கேட் சாலை சேதம் சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை
/
கரசங்கால் ரயில்வே கேட் சாலை சேதம் சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை
கரசங்கால் ரயில்வே கேட் சாலை சேதம் சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை
கரசங்கால் ரயில்வே கேட் சாலை சேதம் சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை
ADDED : ஆக 25, 2025 01:39 AM

அச்சிறுபாக்கம்:கரசங்கால் ரயில்வே கேட்டில் சேதமான சாலையை சீரமைக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்து, வெளியம்பாக்கம் வழியாக முருங்கை, கொங்கரை மாம்பட்டு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில், கரசங்கால் பகுதியில் செங்கல்பட்டு- விழுப்புரம் மார்க்கத்தில், ரயில் தண்டவாளம் உள்ளது.
கரசங்காலில் தண்டவாள பராமரிப்பு பணி நடைபெற்றதால், அப்பகுதியில் வாகனங்கள் கடக்கும் இடங்கள் பெயர்த்து எடுக்கப்பட்டன.
தற்போது, அப்பகுதியில் இரும்பு கம்பிகள் மற்றும் ஜல்லிக் கற்கள் பெயர்ந்து உள்ளதால், இருசக்கர வாகனங்களில் வருவோர் கீழே விழுந்து அடிபடுகின்றனர்.
மேலும், சரக்கு ஏற்றி செல்லும் வாகனங்கள், ஜல்லிக் கற்கள் மற்றும் இரும்பு கம்பிகளால், டயர் பஞ்சர் ஆகிறது.
எனவே, வாகனங்கள் கடக்கும் தண்டவாளப் பகுதியில், சீரமைக்க ரயில்வே துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.