sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

சாலையின் நடுவே அபாய பள்ளம் சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை

/

சாலையின் நடுவே அபாய பள்ளம் சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை

சாலையின் நடுவே அபாய பள்ளம் சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை

சாலையின் நடுவே அபாய பள்ளம் சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை


ADDED : அக் 02, 2025 10:48 PM

Google News

ADDED : அக் 02, 2025 10:48 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலைநகர், மறைமலை நகர் அடுத்த டேன்சி பகுதியில், அணுகுசாலையின் நடுவே ஏற்பட்டுள்ள பள்ளத்தை சீரமைக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், மறைமலை நகர் அடுத்த டேன்சி பகுதியில் உள்ள அணுகுசாலையை சாமியார் கேட், பேரமனுார், தர்னீஸ் கொயர், திருக்கச்சூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த சாலையில், பூமிக்கு அடியில் தனியார் நிறுவனத்தின் தொலைத்தொடர்பு,'கேபிள்'கள் செல்கின்றன. சில மாதங்களுக்கு முன், இந்த கேபிள்களை பராமரிக்கும் பணி நடந்தது.

இதற்காக, அணுகுசாலையில் 5 அடி அகலத்தில், 'பொக்லைன்' இயந்திரம் வாயிலாக பள்ளம் தோண்டப்பட்டு, பணிகள் முடிந்ததும் கான்கிரீட் கலவையால் பள்ளம் மூடப்பட்டது.

தற்போது, இந்த இடத்தில் கான்கிரீட் பெயர்ந்து, பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், வேகமாக வரும் வாகன ஓட்டிகள், பள்ளத்தால் தடுமாறி விழுந்து காயமடைந்தனர்.

இதனால், வாகன ஓட்டிகளுக்கு பள்ளம் தெரியும் வகையில், இரும்பு தடுப்பு வைக்கப்பட்டது. ஆனால், வாகன ஓட்டிகள் இந்த பள்ளம் அருகே வரும் போது தடுமாறுவதால், விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.

எனவே, இந்த பள்ளத்தை சீரமைக்க நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us