sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

கட்டி முடித்து 10 ஆண்டுகளாகியும் திறக்காமல் வீணாகும் ரேஷன் கடை

/

கட்டி முடித்து 10 ஆண்டுகளாகியும் திறக்காமல் வீணாகும் ரேஷன் கடை

கட்டி முடித்து 10 ஆண்டுகளாகியும் திறக்காமல் வீணாகும் ரேஷன் கடை

கட்டி முடித்து 10 ஆண்டுகளாகியும் திறக்காமல் வீணாகும் ரேஷன் கடை


ADDED : அக் 02, 2025 10:49 PM

Google News

ADDED : அக் 02, 2025 10:49 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அச்சிறுபாக்கம், களத்துார் கிராமத்தில், கட்டப்பட்டு 10 ஆண்டுகளாகியும் திறக்கப்படாமல் உள்ள ரேஷன் கடையை, பயன்பாட்டிற்கு திறக்க வேண்டுமென, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அச்சிறுபாக்கம் ஒன்றியம், களத்துார் ஊராட்சியில் உள்ள ஜே.ஜே.நகரில், ரேஷன் கடை அமைக்க வேண்டுமென, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையடுத்து, கரசங்கால்- - கொங்கரை சாலையில், 2015 - 2016ல், மதுராந்தகம் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 6.50 லட்சம் ரூபாயில், ரேஷன் கடைக்கு புதிய கட்டடம் கட்டப்பட்டது.

இந்த கட்டடத்தை கட்டி முடித்து 10 ஆண்டுகளான நிலையில், இன்னும் திறக்கப்படாததால், கிராம மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

தற்போது இந்த கிராமத்தினர், 2 கி.மீ., துாரத்தில் உள்ள களத்துார் கிராமத்தில் செயல்படும் ரேஷன் கடைக்குச் சென்று, பொருட்கள் வாங்கி வருகின்றனர்.

துாரம் அதிகமாக உள்ளதால், முதியவர்கள் மற்றும் பெண்கள் சிரமப்படுகின்றனர்.

எனவே, களத்துாரில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரேஷன் கடையை பயன்பாட்டிற்கு கொண்டுவர, நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us