/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
குண்டும், குழியுமான அஞ்சூர் சாலை பயணிக்க வாகன ஓட்டிகள் சிரமம்
/
குண்டும், குழியுமான அஞ்சூர் சாலை பயணிக்க வாகன ஓட்டிகள் சிரமம்
குண்டும், குழியுமான அஞ்சூர் சாலை பயணிக்க வாகன ஓட்டிகள் சிரமம்
குண்டும், குழியுமான அஞ்சூர் சாலை பயணிக்க வாகன ஓட்டிகள் சிரமம்
ADDED : ஆக 04, 2025 01:48 AM

மறைமலை நகர்:அஞ்சூர் - தென்மேல் பாக்கம் சாலையில் குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமத்துடன் பயணிக்கின்றனர்.
காட்டாங்கொளத்துார் ஒன்றியம், அஞ்சூர் ஊராட்சியில் 1000த்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
இங்கு அஞ்சூர் -- தென்மேல்பாக்கம் சாலையில் குண்டும், குழியுமாக காணப்படுகிறது.
இந்த சாலையை பயன்படுத்தி அனுமந்தபுரம், கொண்டமங்கலம் உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் அஞ்சூர் வழியாக மகேந்திரா சிட்டியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு தினமும் வேலைக்கு சென்று வருகின்றனர். இந்த சாலையில் தென்மேல்பாக்கம், பழைய அஞ்சூர் அருகில் 300 மீட்டர் சாலை மிகவும் சிதிலமடைந்து உள்ளது.
இதனால் ஜல்லி கற்கள் குத்தி வாகனங்கள் பஞ்சராகி குறித்த நேரத்தில் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது.
இந்த சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.